states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் அமர்ந்த பொழுது 7,536 கிலோ லிட்டராக இருந்த தமிழ் நாட்டின் மண்ணெண் ணெய் ஒதுக்கீட்டை தற்போது 2,712 லிட்ட ராக ஒன்றிய அரசு குறைத் துள்ளது. இதுதொடர் பாக ஒன்றிய அரசிற்கு 2 முறை கடிதம் எழுதி யும் பதில் இல்லை. ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு உண வுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி குற்றம்சாட்டி யுள்ளார்.

2011 முதல் 2016 வரை  ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக் கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளது. இதுதொ டர்பான சோதனையில் சவுத் இந்தியா கார்ப்ப ரேஷன் நிறுவனத்திட மிருந்து ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர் பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அமலா க்கத்துறை தகவல் தெரி வித்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள  நியோ - நாஜி குழுக்கள் பள்ளிகளை குறிவைத்து மாணவர்கள் இடையே மோதலை தூண்டும் வகையில் வன்முறை கருத் த்துக்களை டெலிகிராம்  மூலம் பரவவிட்டன. இது தொடர்பான விசாரணை யில் நியோ - நாஜி குழுக் கள் தொடர்பான அனை த்து தகவல்களையும் டெலிகிராம், காவல்து றைக்கு வழங்கவில்லை. இதனால் அந்நாட்டு சிவில் நீதிபதி டெலி கிராமுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் ரகசிய ராணுவத் தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட விமானப் படை வீரர் ஜாக் டீக்ஸீரா விற்கு ஜாமீன் வழங்க அந்நாட்டு பாதுகாப்புத் துறை கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. டீக்ஸீரா வை சிறையில் இருந்து விடுவிப்பது, அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என வழக்க றிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ள நிலையில், ஜாக் டீக்ஸீராவின் ஜாமீன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட உக் ரைன் போர் கட்டுரையின் உள்ளடக்கத்தை நீக்காத தற்காக விக்கிபீடியா விற்கு இரண்டு மில்லி யன் ரூபிள் (ரூ.20 லட்சத் திற்கும் மேல்) அபராதம் விதித்தது ரஷ்ய நீதிமன்றம். 

நடப்பாண்டின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமார் போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்த நிலையில், குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலகச் செய்திகள்

2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ராணுவத் தேவை களுக்கான செலவு நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக இந்த செலவு இருந்தது. நெருக்கடியை மீறி அதிக செலவு செய்யும் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியிருக்கிறது. ஆயுதங்கள் வாங்குவதில்  சீனாவை விட பல மடங்கு அதிகம் செலவை செய்கிறார்கள். ஆனால், அமெரிக்காவின் செலவில் பாதிதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவு இருக்கிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறிய தென் ஆப்பிரிக்கா, தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி சிரில் ராம்போசா அலுவலகத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில், தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறினால் அப்படிப்பட்ட செய்தி வெளி யானது. சர்வதேச நீதிமன்றத்துடனான இணைப்பில் இருந்து தென் ஆப்பிரிக்கா வெளியேறும் உத்தேசம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

அட்லாண்டிக் கடற்பகுதியில் நடைபெற்ற அடிமைகள் வர்த்தகத்திற்குப் போர்ச்சுக்கல் பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மெர்செலோ ரிபெலோ டி சவுசா ஆலோசனை கூறியுள்ளார். இத்தகைய கருத்தை முதன்முதலில் தெரிவிக்கும் போர்ச்சுக்கல் அரசியல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 15ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 60 லட்சம் பேர் பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்பட்டனர்.