states

மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை, ஜூன் 3- தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் படுவதாக தேர்தல் அதிகாரியான சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- 13 வேட்பாளர்களிடமிருந்து 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த 1.6.2022 அன்று பரி சீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத் தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அளித்த வேட்பாளர்கள் எவரும் தங்களது வேட்புமனுக்களை வெள்ளியன்று (ஜூன் 3) 3 மணிக்குள் திரும்பப் பெறவில்லை. இந்த தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6. போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதால், 1951 ஆம்  ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு  53/2- ன்படி, திமுகவைச் சேர்ந்த சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ் குமார், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.