கடலூர், ஏப். 18- கடலூர் அருகே சுடு தண்ணீரில் விழுந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி வாணிபம் பகுதியை சேர்ந்தவர் ராமன்.(31). இவரது மகள் யாசினி (5). சம்பவத்தன்று ராமன் வீட்டு முன்பு விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது அங்கு யாசினி விளையாடிக் கொண்டிருந்தார். அடுப்பில் சுடு தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த போது திடீரென்று தவறி யாசினி சுடு தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் சிறு மியை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை காலை யாசினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.