states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பரமத்தி வேலூர் அருகே விபத்து: 5 பெண்கள் பலி

நாமக்கல், பிப். 28-  சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர் களான சுதா, கந்தாயி, குஞ்சம் மாள், சாந்தி, 4 வயது குழந்தை உட்பட ஏழு பேர் திருச்சி மாவட்ட த்தில் உள்ள வீரப்பூர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். பின் னர், செவ்வாயன்று அதிகா லை வீடு திரும்பி கொண்டிருந் தனர். காரை ரவி ஓட்டி வந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  அடுத்துள்ள படமுடி பாளை யம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே காரில் வந்து கொண்டி ருந்த போது,  ஓட்டுனரின்  கட்டுப் பாட்டை இழந்து கார் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பல மாக மோதியது.  இதில், சம்பவ இடத்திலேயே ரவியின் மனைவி கவிதா, சுதா,  கந்தாயி, குஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.   மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாந்தியை மேல் சிகிச்சைக் காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்கை யில், வழியில் அவரும் உயிரி ழந்தார். ஐந்து பேரின் உடலும் பரமத்தி வேலூர் அரசு மருத்து வமனையில் உடற்கூறு  ஆய்வுக்காக வைக்கப் பட்டுள்ளது.   மேலும், இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது சிறுமி  ஆகிய இருவர் மட்டும் உயிர் தப்பி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 

உலகச் செய்திகள்

வரும் மாதங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு இருக்கும் என்று ருவாண்டா குறித்த வானிலை அறிக்கையை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள். 2022 ஆம் ஆண்டில் வெள்ளம், மலைச்சரிவு, சூறாவளிக்காற்று மற்றும் மழைக்காற்று ஆகியவற்றால் சுமார் 150 பேர் ருவாண்டாவில் கொல்லப்பட்டனர். நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் சுமார்  500 மி.மீ முதல் 600 மி.மீட்டர் வரையில் பெரும் மழைப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போரை நிறுத்தும் வகையிலான சீனாவின் அமைதித்திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரி வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் பேசியபோது, “போர் நிறுத்தம் மிகவும் அவசியம். பின்னர் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். சீனா முன்வைத்துள்ள திட்டத்தைப் பரிசீலனை செய்வது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

நேபாள அரசியலில் திடீர் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஜனாதிபதிக்கான தேர்தலில் நேபாள காங்கிரசின் வேட்பாளரை ஆதரிக்க மாவோயிஸ்டு மையம் முடிவெடுத்ததால், அதன் தலைமையிலான அரசிற்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. அடுத்த கட்ட மாற்றங்களை அமைச்சரவையில் மேற்கொள்வது பற்றி பிரதமரும், மாவோயிஸ்ட் மையத்தின் தலைவருமான பிரசந்தா மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறார்.