states

தீக்கதிர் விரைவு செய்திகள்

லடாக்கில்  4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

லடாக்கின் கார்கில்  மாவட்டத்தில் செவ்வாயன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக் கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்  சேதமோ ஏற்பட்டதாக தக வல்கள் வெளியாகவில்லை. 

ராகுல் பயணம்: இன்று பிரியங்கா இணைகிறார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல்  காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி,  கன்னியாகுமரியில் இருந்து துவங்கினார். குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் முடி வடைந்த நிலையில், புதன்  கிழமை மீண்டும் தனது நடை பயணத்தை மத்தியப்பிர தேசத்தில் இருந்து துவங்கு கிறார். இந்நிலையில், இந்த நடைபயணத்தில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இணைந்து கொள் வார் என்று கட்சியின் மூத்த  தலைவர் ஜெய்ராம் ரமேஷ்  தெரிவித்துள்ளார். பிரி யங்கா காந்தி, தொடர்ந்து 4 நாட்கள் ராகுல் காந்தி  யுடன் பயணம் மேற்கொள் வார் என்றும் அவர் கூறி யுள்ளார்.

விவசாயிகளின் உரிமை பறிப்பு: கார்கே கண்டனம்

“உணவு வழங்கும் மக்க ளின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கை.  கடந்த 2019-ஆம் ஆண்டு பிர தமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை வழங்கப் பட்ட பயனாளிகளின் எண்  ணிக்கையிலிருந்து தற் போது 67 சதவிகிதம் பயனா ளிகள் எண்ணிக்கை குறைந்  துள்ளது. அதாவது பயனாளி கள் எண்ணிக்கை 11.87 கோடியில் இருந்து கடைசி யாக மே மாத தவணை  வழங்கப்பட்ட போது பய னாளிகள் எண்ணிக்கை 3.87 கோடியாக சரிந்துள்ளது.  ஒவ்வொரு தவணைக்கும் பயனாளர்களின் எண் ணிக்கை குறைந்து வந்தது தான் உண்மை. விவசாயி களின் உரிமையை பறிப்ப தன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தின் அனைத்து பழங்குடியினர் காலனிகளிலும் இணையதள வசதி அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தகவல்

வடகஞ்சேரி, நவ.22- கேரளத்தில் உள்ள அனைத்து பழங்குடியினர் காலனிகளி லும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் மாநிலத்தில் மொத்தமுள்ள 1,286 காலனிகளில், 1,030 இன்டர்நெட் வசதி யை பெற்றுள்ளன. பழங்குடியின மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியை உறுதி செய்வதே அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மங்கலம் தாளிக்கல் காலனியில் கட்டி முடிக்கப்பட்ட 37 வீடு கள், சாலைகள் மற்றும் பாலங்களை செவ்வாயன்று (நவ.22)  அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், இந்த வசதி மற்ற காலனிகளையும் சென்ற டைவதால், நாட்டில் உள்ள அனைத்து பழங்குடியினர் காலனி களிலும் இணைய வசதி உள்ள மாநிலமாக கேரளா மாறும்.  காலனிகளின் பிற அடிப்படைக் கட்டமைப்புகளை மேம் படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காலனிகளை போதையற்றவைகளாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அரசு சேவைகளை உரிய நேரத்தில் வழங்கி சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வந்து தன்னிறைவு அடைய முடியும் என்றார் அமைச்சர்.

5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,நவ.22- வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:- தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங் களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழ் நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்: ஆளுநரை சந்திக்க முடிவு

சென்னை, நவ22- ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கக் கோரி ஆளுநரை சந்திக்க முடிவு  செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-  ஆன்லைன் விளையாட்டு தடை  சட்டத்திற்கான முன் முடிவு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் எந்தவிதமான விளக்கமும் இதுவரை கேட்கவில்லை.  அவசர கூட்டத்திற்கு அனுமதி கிடைத்து விட்டது. அதில் உள்ள சரத்து கள் தான் இதிலும் உள்ளன. சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இல்லை. கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். இருந்தாலும் ஏன் மசோதாவுக்கு அனுமதி தராமல் வைத்து இருக்கிறார் என்று சொல்ல முடியாது.  அதனால் ஆளுநரை நானும் சட்டத்துறை செயலாளரும் சந்திக்க நேரம்  கேட்டிருக்கிறோம். நேரம் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். இதுகுறித்து அவரிடம் விளக்கி எடுத்து கூறுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

மகளிர் சுய உதவிக்  குழுக்களை அதிகரிக்க அமைச்சர் அறிவுரை

சென்னை, நவ.22- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வா தார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடு கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் பெரியகருப்பன் செவ்வாயன்று (நவ.23) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிக  எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக்  குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் சுய உதவிக் குழுக் களை சென்றடையும் வகையில் செயல்பட  வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி  வழங்க, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைந்து அடைய வேண்டும்”என்றார்.

ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்: சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி

சென்னை,நவ.22-  மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவு க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.  சென்னையை அடுத்த கேளம்பாக்கத் தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில்  படித்த மாணவனின் தாய்க்கு, அப்பள்ளி யின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010 ஆம்ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி  உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை  விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப் படாததால், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி மஞ்சுளாமுன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர்பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காலதாம தமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக்கூடாது என வாதிட்டார். காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘புகார்தாரர் தரப்பு வாத த்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்ட தால் அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’’ என்றார். இதையடுத்து, சிவசங் கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதி பதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை இறுதி விசார ணைக்காக நவ.29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நேபாள நாடாளுமன்றத் தேர்தல் முழு முடிவுகள் டிச.8ல் தெரியும்

காத்மண்டு, நவ.22-  நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கும், ஏழு மாகாண அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல் களின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டி ருக்கும் நிலையில், முழுமையான நிலவரம் தெரிய டிசம்பர் 8 ஆம் தேதி வரையில் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 275 உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 165 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தொகு திகளில் இருந்தும், 110 பேர் கட்சிகள் பெறும் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப் படுவார்கள்.  முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடு கையில் இந்த முறை வாக்குப் பதிவு குறைவா கவே இருந்திருக்கிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் வெவ் வேறு கூட்டணிகளில் போட்டியிடுகின்றன. நேபாள காங்கிரசுடன் இணைந்து மாவோ யிஸ்ட் மையம் மற்றும் ஐக்கிய சோசலிஸ்டு ஆகிய கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. மற்றொரு அணிக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமை தாங்கி யுள்ளது. அந்த அணியில் ஜனதா சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி ஆகியவை உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சி ஸ்ட்-லெனினிஸ்ட்) 31 விழுக்காடு வாக்கு களும், நேபாள காங்கிரஸ் 26 விழுக்காடும், ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி 13 விழுக்காடும், மாவோ யிஸ்ட் மையம் 12 விழுக்காடும், ராஷ்டிர பிரஜா தந்திரக் கட்சி 7 விழுக்காடும் பெற்றுள்ளன. ஆனால், மிகக் மிகக் குறைவான வாக்குகளே இது வரையில் எண்ணப்பட்டுள்ளன. முழுமையான முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என்று நேபாள தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ் கானெல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஒரு வார காலம் பயணம் செல்லும் அவர், அல்ஜீரியா, ரஷ்யா, துர்க்கியே மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அவரது சீனப் பயணத்தை அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யாங் உறுதிப்படுத்தியுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஜகஸ்தானின் புதிய ஜனாதிபதியாக காசிம் ஜோமர்ட் டோகவேய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவர் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81.31 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். மொத்தம் பதிவான 1 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளில் டோகயேவுக்கு 83 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இவரையும் சேர்த்து மொத்தம் ஆறு வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் இயங்கி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு கூட்டுப்படை ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளார்கள். கானா, பெனின், பர்கினோ ஃபசோ, மாலி, டோகோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் உள்ள ஆயுதந்தாங்கி குழுக்களை எதிர்க்கவே இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளனர். இத்தகைய திட்டம் பற்றிய விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கானாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஆல்பெர்ட் கான் டபா தெரிவித்துள்ளார்.