states

யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ. ஆயிரத்து 558 கோடி லாபம்!

புதுதில்லி, ஜூலை 31- பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘யூனியன் பேங்க் ஆப்  இந்தியா’ வங்கி, 2022-23 நிதியா ண்டின் ஜூன் காலாண்டில் ரூ. ஆயி ரத்து 558 கோடி நிகர லாபம் ஈட்டி யுள்ளது. நிகர வட்டி வருமானத்தின் வளர்ச்சி, ஊழியர்களுக்கான செலவில் சரிவு மற்றும் நிலையான சொத்துக்களுக்கு திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றின் பின்னணியில் முதல் காலாண்டில் நிலையான நிகர லாபம் 32 சதவிகி தம் அதிகரித்து ரூ. ஆயிரத்து 558 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே  காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. ஆயிரத்து 181 கோடியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. நிகர வட்டி வருமானம் ரூ.7,013 கோடியிலிருந்து 8.11 சதவிகிதம் உயர்ந்து ரூ. 7 ஆயிரத்து 582 கோடி யாகி உள்ளது. மொத்த வராக் கடன் 13.60 சத விகிதத்திலிருந்து 10.22 சதவிகித மாகவும், நிகர அளவிலான வராக் கடன் 4.69 சதவிகிதத்திலிருந்து 3.31 சதவிகிதமாகவும் குறைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் ரூ. 15 ஆயி ரம் கோடி மதிப்பிலான கடன்களை  மீட்டெடுக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் மட்டும் ரூ.4,200 கோடி மதிப்பிலான கடன்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று வங்கியின் இயக்குநர் ஏ. மணி மேகலை தெரிவித்துள்ளார்.