states

சர்தாம் புனித யாத்திரை சென்றவர்கள் 31 பேர் பலி

டேராடூன்,  மே 14- உத்தரகண்டில் உள்ள சார்தாம் புனித யாத்திரை  கடந்த 3-ஆம் தேதி துவங்கியது.   யாத்திரை சென்ற பக்தர்களில் 28 பேர் உயிரிழந்தனர் என்று உத்தரகண்ட் பொது சுகாதார இயக்குனரான டாக்டர் சைலஜா பட் தெரிவித்து உள்ளார். சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந் துள்ளது. அவர்கள் அனைவரும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலையேறுவதில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட பிற உடல்நலம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.