states

28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது

சென்னை, செப்.1- தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்ட ணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த  ஏப்ரல் 1ஆம் தேதி சில சுங்கச்சாவ டிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின் வியாழனன்று (செப் 1)  நள்ளிரவில், மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. அதில் விக்கிரவாண்டி- திண்டி வனம்-உளுந்தூர்பேட்டை, கொடைரோடு-திண்டுக்கல்-புற வழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம். நத்தக்கரை-சேலம்-உளுந் தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தருமபுரி -கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி- திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர் பேட்டை-பாடலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் அடங்கும். விழுப்புரம் அருகே உள்ள விக்கிர வாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை  கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355-ஆக அதிக ரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.