states

சிபிஎம் நடைபயணம் எழுச்சியுடன் துவக்கம்!

மயிலாடுதுறை, டிச.17-  போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படு வதை மீட்டெடுக்க ‘‘வீரவெண்மணி வர லாறும் கம்யூனிஸ்ட்களின் தியாகமும்’’ என்ற பதாகையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் 250 கி.மீ நடைபயணம்-சனிக்கிழமை யன்று எழுச்சியுடன் துவங்கியது.                                                     ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் கீழத்  தஞ்சையிலிருந்த கீழவெண்மணி கிராமத்தில்  1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25-இல் பண்ணை யார்களால் ஒரே குடிசையில் 44 விவசாயத்  தொழிலாளர்கள் தீ வைத்து எரித்துக்கொல் லப்பட்டனர். உரிமை போரில் அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து ‘‘வீரவெண் மணி வரலாறும்-கம்யூனிஸ்ட்டுகளின் தியாக மும்’’ என்ற பதாகையோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு சார்பில் மாபெரும் நடைபயணம் கொள்  ளிடம் ஒன்றியம் ஆச்சாள்புரத்தில் சனிக்கிழ மையன்று காலை எழுச்சியுடன் துவங்கியது. சமூக ஆர்வலர் மூத்தவர் சிவபிரகாசம் உரையாற்றி நடைபயணத்தை துவக்கி வைத்தார். நகர்ப்புறங்கள், கிராமங்கள், உள்  கிராமங்கள் என மாவட்டம் முழுவதும் 250  கிலோ மீட்டர் தொலைவு தூரம் பயணித்து ஏழை, எளிய மக்களையும், நடுத்தர மக்களை யும் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து போராட்டங்களுக்கு தயார் படுத்துவதே இதன் குறிக்கோள்.

இந்த நடை பயணத்திற்கு கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்துச் செல்கிறார். டிசம்பர் 17 முதல் டிசம்பர் 23 வரை நடை பெறுகிற இப்பயணத்தில் மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் என 100 க்கும் அதிகமான தோழர்  கள் சிவப்பு சட்டை அணிந்து மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் மற்றும்  கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை ஏந்தி யவாறு நடைபயணத்தில் இடம்பெற்றுள்ள னர். பயணத்திற்கு முன் வரிசையில் செந்  தொண்டர்களும் அணிவகுத்து செல்கின்ற னர். மக்களின் நலன்காக்க நடைபெறும் நடை பயணத்திற்கு வழி நெடுகிலும் பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது . ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள கிளை செயலாளர்கள்,உறுப்பினர்கள், வாலிபர்,  மாதர், மாணவர் சங்கங்களின் நிர்வாகி களும் ஆங்காங்கே கலந்து கொண்டு சிறப் பிக்கும் நடைபயணத்தின் முதல் நாளான சனியன்று ஆச்சாள்புரத்தில் துவங்கி மாதானம், மதானம், கே.கே.கோவில், நல்லூர், வடகால், கடவாசல் உள்ளிட்ட கிரா மங்கள் வழியாக  திருமுல்லைவாசலில் நிறை வடைந்தது.