திருநெல்வேலி, மே 12- விசாரணைக்கு வந்தவர்களை பற்களை பிடுங்கிய விவகாரத்தில் துணை ஆய்வாளர்கள் உள்பட 24 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட எஸ். பி. சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித் துள்ளார். அதன்படி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் காவல் துணை ஆய்வாளர்கள், சிறப்பு காவல் ஆய்வாளர்கள் , ஏட்டுக்கள், முதல் மற்றும் 2-ஆம் நிலை காவ லர்கள் என மொத்தம் 24 பேரை மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலை யங்களுக்கு மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார். குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். காவல் துணை ஆய்வாளர்கள் முரு கேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நட ராஜன், பாலசுப்பிரமணியன், சிறப்பு துணை ஆய்வாளர்கள் வெங்கடேஸ் வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன் துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தானகுமார், ராஜ்குமார் ஆகிய 24 பேர் நெல்லை மாவட்டத்தில் உள்பட பல்வேறு காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.