மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் உயிரி ழந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான மருத்துவம் கிடைக்க அரசு கடமைப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்த மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வரும் அக்., 6 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதற்காக பொதுக் கூட்டத்தைக் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் அள வுள்ள குட்கா, பான்மசாலா கடந்த 2 ஆண்டு களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவ கங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் பேவர்பிளாக் சாலை அமைக்க முறையாக டெண்டர் விடப் பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விசா ரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 16 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமை யிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கருவுற்ற நிலை யில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (42), மாரி (52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர் களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.