சென்னை, மே 30- சென்னை மாநகராட்சி பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை காவல் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து இதுபோன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலை யங்களுக்கான தொழில் உரிமம் பெறுவ தற்கு புதிய விதிகளை மாநகராட்சி சென்னை மாநகராட்சி உருவாக்கி யுள்ளது. இதன்படி, தொழில் உரிமை பெறு வதற்கு ஒற்றை சாளர முறையில் சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, போக்கு வரத்துத் துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனு மதி அளிப்பார்கள். குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற் கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.