ஒன்றிய அரசின் தூய்மை திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.20 கோடி வழங்க ஒப்பு தல் அளித்துள்ளது.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை அதி கமாக ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் மகா ராஷ்டிர மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கன்கேர் மாவட்டத்தின் பார்தாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சடக்டோலா கிராமத்தில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேக்கரி சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் காய மடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவ லைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலா னோர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புத்தூர் அருகே திருமண மண்டபத்தில் வைக்கப் பட்ட ஸ்பிரே சிலிண்டர் வெடித்ததில், 11 வயது சிறுமி பலியானார்.
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். புதனன்று அக்கட்சி யின் எம்எல்ஏ பூபேந்திர பயானி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நிலை யில், வியாழனன்று ஆம் ஆத்மி கட்சியின் சட்ட மன்ற குழு தலைவர் சைதார் வாசவா மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள இந்தஸ் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் வியாழனன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறை யினர் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து, 2-ஆவது தளத்தில் சிக்கிய நோயா ளிகள் அனைவரையும் துரிதமாக மீட்டனர்.