states

img

வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது மதுரை மாவட்டம்!

ஒத்துழைத்த அனைவருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி

மதுரை, அக்.13-  மாற்றுத்திறனாளி முகாம்களில் 20 ஆயி ரம் பேர் பங்கேற்று பலனடைந்துள்ளனர்.இத்த கைய வரலாற்றுச் சாதனையை மதுரை மாவட்  டம் நிகழ்த்தியுள்ளது.இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்  பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 வரை  14 நாள்களில் 15 முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன. ஒன்றிய அரசின் சமூகநலன் மற்றும் அதி காரம் வழங்கல் துறை, மாநில அரசின் மாற்றுத்  திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து மிக விரிவான முறையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.  இம்முகாம்களில் 17 ஆயிரத்து 796 பேர்  பங்கெடுத்துப் பயனடைந்துள்ளனர். இது போக சிறப்புப்பள்ளி மாணவர்கள் 2500 பேரின் தேவைகளையும் இத்துடன் இணைக்கவுள் ளோம். மொத்தத்தில் 20 ஆயிரம் பேர் பங் கேற்றுப் பலனடைந்த முகாம்களாக இவை நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடந்த முகாம் களிலே மிக அதிகமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்த முகாம்கள் இவையே யாகும்.

இம்முகாம்களில் அலிம்கோ மூலம் செயற்கை உபகரணங்கள் வழங்க தேர்வு  செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை 2546 ஆகும். இவர்களுக் குரிய கருவிகளை 45 நாள்களில் தயாரித்துத் தரும் பொறுப்பினை ஒன்றிய அரசின் சார்பில் அலிம்கோ ஏற்றுள்ளது. இந்தக் கருவிகளின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் இருக்கும். இது தவிர இரயில்,  பேருந்துப் பயணச் சான்று அட்டை பெற்றவர்கள் 3043 பேர். இரு  சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் 500 பேர். தனித்துவ அடையாள அட்டை( UDID) 2450 பேர். வங்கிக்  கடன் மானியம் 250 பேர். மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 226 பேருக்கு தர தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இம்மாபெரும்  முகாம்களை வெற்றிகர மாக்க உழைத்திட்ட மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், அலிம்கோவின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை முகாம்  களுக்கு அழைத்து வந்த வகையில் சுமார்  50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இம்முகாம்  களுக்கு வந்து போயுள்ளனர். அனைவருக் கும் தேவையான உதவிகள் செய்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள், மாற்  றுத்திறனாளிகளின் சங்கங்கள் ஆகிய அனை வருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற கடந்த ஒரு மாத காலமாக உழைத் திட்ட எங்கள் இயக்கத்தோழர்கள் அனை வருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். 15 முகாம்களுக்குத் தேவையான உணவு,  குடிநீர் ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்து கொடுத்து உதவிய ரோட்டரி கிளப் நண்பர் களுக்கும் எனது அன்பான நன்றி. சமகாலத்தில் மதுரையில் மகத்தான தொரு நிகழ்வாக இம்முகாம்கள் நடந்துமுடிந்  துள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.