கேரளாவின் கோழிக்கோடு மாவட் டத்தில் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் திங்க ளன்று உயிழந்தனர். இருவரது மரணமும் வழக்கத்துக்கு மாறான வைரஸ் காய்ச்சலில் நேரிட்ட இறப்பாக மருத் துவர்கள் வகைப் படுத்தி உள்ள நிலை யில், கோழிக்கோடு மாவட் டத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கியமாக இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் களும் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தால், கோழிக்கோடு மாவட்டத்தில் மீண் டும் நிபா வைரஸ் பதற்றம் ஏற்பட்டுள் ளது. பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் ஆட்கொல்லி நோய் என்பதால் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், துறை சார்ந்த உயர்மட்டக் கூட்டத்தின் வாயிலாக நிலை மையை ஆய்வு செய்து வருகிறார்.