states

18 ஆயிரம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரே நாளில் ஓய்வு

சென்னை,ஜூன் 1- தமிழ்நாட்டில் 2020 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும்  வயது 58-ஆக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதனால், 2020-இல் ஓய்வு பெறவிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணப் பயன்களை வழங்க முடியாத சூழல் உரு வானது. இதையடுத்து, ஓய்வுபெறும் வயது 59-ஆகவும், 2021-இல் 60-ஆகவும் உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி, அக விலைப்படியும், ஈட்டிய விடுப்பு ஊதிய மும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்கிய அகவிலைப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்டபோதும், ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம் தொடர்கி றது. இந்நிலையில், 2020-ல் 58 வயதை எட்டிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்போது 60 வயதை அடைந்ததால் மே 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றனர். தலைமைச் செயலகத்தில் 49 பேர் உட்பட  தமிழகம் முழுவதும் 5,286 அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்கள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் தொழி லாளர்கள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரம்  பேர் ஓய்வு பெற்றுள்ளதாகக் கூறப்படு கிறது.