டேராடூன், ஜூலை, 19- உத்தர்கண்ட் மாநிலத்தின் நமாமி கங்கை திட்டப் பகுதியில் மின்மாற்றி வெடித்து 16 பேர் உயிரிழந்தனர். உத்தர்கண்டின் சாமோலி மாவட்டத் திற்கு உட்பட்ட பிபால்கோட்டி கிராமத்தி லுள்ள அலக்நந்தா நதியைக் கடந்து செல்லும் நமாமி, கங்கை சுத்திகரிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்ததில் காவலர் ஒருவர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்த நிலையில், மின்சாரம் தாக்கி காயமடைந்ததில் 22 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 15 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த னர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இன்னும் 7 பேர் சிகிச்சையில் உள்ள நிலை யில், ஏழு பேரும் தற்போது ஹெலிகாப்டர் மூலமாக ரிஷிகந்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக சாமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேந்தர தோபால் கூறியுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.