சென்னை,மே 8- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மாநிலப் பாடத் திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 8.69 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மே 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறு கின்றன. இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அதிகாரி கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு பாடத் தேர்வு முடிந்த பிறகும், மாணவர்களின் விடை த்தாள்கள் மண்டல தேர்வு மையங்க ளுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்துதிருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் மே 28 ஆம் தேதி முதல் 2 கட்டமாக அனுப்பிவைக்கப்படும். ஜூன் 1 முதல் 8 ஆம் தேதிவரை விடைத்தாள் திருத்தும்பணி நடக்க உள்ளது. இதில் சுமார் 46,000 முதுநிலை ஆசிரி யர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப் பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியி டப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.