states

வெளிமுகமை மூலம் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து பிப்.16, 28 இல் தர்ணா,பெருந்திரள் முறையீடு

11 ஆயிரம் நகராட்சிப் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் அறிவிப்பு

மதுரை, பிப்.7-   தமிழ்நாட்டில் 138 நகராட்சிகளில் உள்ள 11 ஆயிரம் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு ,அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் அந்தப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நிரப்புவதற்கு பரிந்து ரைக்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் 12 சிறப்புநிலை நகராட்சி கள், 25 தேர்வு நிலை நகராட்சிகள், 31 முதல் நிலை நகராட்சிகள். 70 இரண்டாம் நிலை நக ராட்சிகள் என மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. நகராட்சிகளில் புதிய வரையறைப் படி நிர்ணயம் செய்யப்படும் பணியிடங்கள், தற்போதுள்ள பணியிடங்களில் தக்க வைக் கப்படும் பணியிடங்கள் , படைப்பு செய்யப் படும் பணியிடங்கள் ஆகியவற்றின் விவ ரங்களுடன் கூடிய அரசாணை கடந்த மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நிரந்தரப் பணியிலுள்ள 4,212 பணியி டங்கள் பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரி யும் 7 ஆயிரம் தூய்மைப் பணியாளர் பணி யிடங்கள் அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகு அரசிடம்  திரும்ப ஒப்படைக்கப்படும். இதன்மூலம், ஓராண்டுக்கான ஊதியச் செல வினம் ரூ .606 கோடியிலிருந்து ரூ .460 கோடி யாகக் குறையும் . புதிய வரையறைகளின்படி, தற்போதுள்ள பணியிடங்களை முறைப் படுத்தும் போது ஒப்படைப்பு செய்யப்படும். செலவினத்துக்கு அரசின் உதவி தேவைப் படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியாளர்கள் அதிருப்தி 

தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் உள்ள நிரந்தரப் பணியாளர்களால் கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பீடு செய்து , சிக்கன நட வடிக்கையாக 35 ஆயிரம் பணியிடங்களை 3417 பணியிடங்களாகக் குறைத்து கடந்த 3  மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தற்போது நகராட்சிகளிலும் அந்த நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளில் (பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டவை) ஒற்றை இலக்கத்திலேயே நிர்வாகப் பணியாளர்கள் உள்ளனர். இதேபோன்று , நிர்ணயிக்கப்பட்ட 6,024 பணியிடங்களில் 1200 - க்கும் மேற்பட்ட பணி யிடங்கள் காலியாக உள்ளதாக அரசாணையி லேயே குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தப் பணியி டங்களை நிரப்புவது குறித்து எவ்விதத் தக வலும் தெரிவிக்கப்படவில்லை . 11 ஆயிரம் பணியிடங்களை வெளி முகமையிடம் ஒப்ப டைக்க அரசு எடுத்துள்ள முடிவு நகராட்சி ஊழி யர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கா.முருகானந்தம் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சேவைத் துறை என்ற நிலையை மாற்றி வருமானம் ஈட்டும் துறை போன்று ஊழியர்களின் ஊதியச் செலவினத்தை அரசுக்கு ஏற்படும் இழப்பா கக் கணக்கீடு செய்துள்ளனர். 

மக்கள் தொகை அடிப்படையிலோ, நக ராட்சியின் பரப்பளவு அடிப்படையிலோ பணி யிடங்கள் வரையறை செய்யப்படவில்லை. குறிப்பாக பிரிவு ஊழியர்கள் புதிய அரசாணை யின் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, மாநகராட்சிகளில் ஒரு தூய்மைப் பணியாளர்கூட இனி நிரந்த ரப் பணியாளராக இருக்க முடியாது. 11,200 பணியிடங்களை வெளி முகமை மூலம் தேர்வு  செய்வதற்கான முடிவை அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும்.  டி- பிரிவு பணி யிடங்களை அரசே நியமனம் செய்து , அந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க வேண்டும்.  நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தர பணி யிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10ஐ திரும்பப் பெறக் கோரி பிப்ரவரி 11 ,12 ஆகிய நாட்களில் மண்டல அளவில் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்துவது, பிப்ரவரி 16  அன்று அனைத்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவ லகம் முன்பாக மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது, பிப்ரவரி 28 அன்று சென்னையில் நகராட்சி நிர்வாக இயக்குநரி டம் பெருந்திரள் முறையீடு அளிப்பது என்று தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.