states

img

தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
   மானாமதுரை மண்பாண்டங்கள், மணப்பாறை முறுக்கு, மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கடந்த மாதம் ராமநாதபுரம் குண்டு மிலகாய் மற்றும் வேலூர் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிர்க்கு புவிசர் குறியீடு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாகவும் தனித்தன்மையுடன் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தவும், கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து, கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்  நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
 இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது..

;