1.4 லட்சம் கோடி 9வது மாதமாக ஜிஎஸ்டி
புதுதில்லி, டிச. 1- ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை ஒன்றிய நிதி யமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத் தில் ரூ. 1 லட்சத்து 45 ஆயி ரத்து 867 கோடி ஜிஎஸ் வசூ லாகி இருப்பதாக நிதியமைச் சகம் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது. நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வரு வாய் 1,45,867 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 25,681 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 32,651 கோடி, ஒருங்கிணை ந்த ஜிஎஸ்டி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ. 38,635 கோடி உட்பட) ரூ. 77,103 கோடி. பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ. 817 கோடி உட்பட மொத்த செஸ் வசூல் ரூ. 10,433 கோடி. தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி எஸ்டி வசூலாகி உள்ளது.
10 ரூபாய் வரை குறைத்திருக்கலாம்
புதுதில்லி, டிச. 1- பெட்ரோல், டீசல் விலை யை ஒன்றிய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டுவிட்ட ரில் இதுதொடர்பாக பதி விட்டுள்ள அவர், “கடந்த 6 மாதங்களில் கச்சா எண் ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் ஒன்றிய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறை க்கவில்லை” என்றும், விலை வாசி உயர்வு காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளா கியுள்ள நிலையில், பிரத மர் வசூலில் மூழ்கி இருப்ப தாகவும் விமர்சித்துள்ளார்.
கல்வி உதவித் தொகையையுமா பறிப்பீர்கள்..?
“பிரதமர் மோடி அவர்களே, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை யில் படிக்கும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை உங்கள் அரசு நிறுத்தி இருக் கிறது. ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறித்ததால் என்ன பலன்? ஏழை மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகை யை பறிப்பதன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு சம்பாதித்து விடும் அல்லது சேமித்து விடும்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
57% சதவீத வாக்குப்பதிவு
அகமதாபாத், டிச. 1- குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு (19 மாவட்ட தொகுதி களுக்கான) வியாழனன்று நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்கு கள் மட்டுமே பதிவாகியுள்ள தாக தகவல் வெளியாகிய நிலையில், அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி யுள்ளது.
சர்வர் கோளாறு
மும்பை, டிச. 1- நாட்டின் முதன்மையான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்தின் 2-வது முனை யத்தில் சர்வர்கோளாறு காரணமாக விமான சேவை கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை உத்தரகண்ட் பாஜக அரசு மசோதா
உத்தரகண்ட் மாநில ஆளும் பாஜக அரசு, கடந்த 2018-ஆம் ஆண்டே மத சுதந்திர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி ஒருவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் ஓராண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப் படும் என்று இருந்தது. இந்நிலையில், இச்சட்டத்தை மேலும் கடுமையாக்க முடிவுசெய்த பாஜக அரசு, உத்தரகண்ட் மத சுதந்திரம் (திருத்த) மசோதா- 2022 சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், குற்றவாளிக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு: நீதிபதிகளுக்கு அழைப்பு
சென்னை, டிச.1- பொங்கலையொட்டி அடுத்த மாதம் மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ள்ளதால் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு விடுத்துள்ளார்.
விமானத்தில் கடத்திய ரூ.18.54 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி,டிச.1- திருச்சி சர்வதேச விமான நிலையத்தி லிருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற் கிடையே குருவிகள் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் வெளி நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு உள்ளிட்ட சில நாடுக ளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் அதை வாங்கி, மறைத்து எடுத்து வருவது அதிகரித்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய வாலிபரை தனி அறைக்கு அழைத்து சென்று அவரது உடமைகளை நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது தங்கம் கடத்தி வந்தது உறுதியானது. அவர் தான் எடுத்து வந்த சிலிண்டர் போன்ற எந்திரத்தில் 347.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அதன் மதிப்பு 18 லட்சத்து 54 ஆயிரத்து 955 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து அந்த வந்த வாலிபர் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பு
சென்னை,டிச.1- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும். பிறகு, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதியை ஒட்டி தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்க ளில் ஒரு சில இடங்களிலும் டிசம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத் திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஆளுநருடன் சந்திப்பு: அமைச்சர் ரகுபதி விளக்கம்
சென்னை,டிச.1- தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்கக் கோரி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வியாழனன்று(டிச.1) சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்டங்க ளையும் இணையவழி சூதாட்டங் களையும் தடை செய்வதற்கா கவும், ஒழுங்குபடுத்துவதற்கா கவும் தமிழக அரசால் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில்களை சொல் லியிருந்தோம். அதுதொடர்பாக அரைமணி நேரம் விளக்கங்களை எல்லாம் தந்திருக்கிறோம். ஆளுநரும் அந்த மசோதா தன்னுடைய பரிசீலனையில் இருக்கிறது.
விரைவில் அதில் நான் முடிவெடுத்து முடிவை தெரிவிக்கிறேன் என்று தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அவசர சட்டத்துக்கும், இந்த சட்டத்திற் கும் வித்தியாசங்கள் கிடை யாது. அவசர சட்டம் இயற்றப்பட்ட போது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட வர்களின் எண்ணிக்கை 17, தற்போது இந்த எண்ணிக்கை 25. நேரடியாக இந்த விளை யாட்டை விளையாடிய யாரும் தற்கொலை செய்து கொண்டது கிடையாது. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். இதனால், 25 உயிர்களை குறுகிய காலத்திலேயே நாம் இழந்திருக்கிறோம். உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள், உங்க ளுக்கு 8 ஆயிரம் ரூபாய் தந்திருக் கிறோம் என்றுகூறி, அனை வருக்கும் குறுஞ்செய்தி வரு கிறது. அதைநம்பி விளையாட சென்று 8 லட்ச ரூபாயை இழந்து அந்த குடும்பம் நடுவீதிக்கு வந்து நிர்க்கதியாக நிற்கிறது. எனவே இதனை தடை செய்ய வேண்டும். அதற்கு இந்த சட்ட மசோதா வுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல் வரின் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். ஆளு நரிடம் இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. குறிப் பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும் படி நாம் கேட்க முடியாது . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விதிகள் திருத்தம் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம், டிச.1- மாநில பல்கலைக்கழகங்களின் வேந் தராக பிரபல கல்வியாளர்களை நியமிக்க பல்கலைக்கழக விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இதன்படி கேரளா, மகாத்மா காந்தி, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், சங்க ராச்சாரியா, துஞ்சத்தேழுத்தச்சன் மலை யாளப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட் டல் பல்கலைக்கழகம், ஸ்ரீ நாராயணகுரு திறந்த நிலை பல்கலைக்கழகம், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம், கேரள கால்நடை அறிவியல் பல்கலைக்கழ கம், கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக் கழகம், கேரள சுகா தாரப் பல்கலைக்கழகம், ஏ.பி.ஜே. அப் துல் கலாம் பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் விதிகளில் திருத்தம் செய்யப் படும். நியமிக்கப்பட்ட வேந்தருக்கு எதிராக கடுமையான முறைகேடு குற்றச்சாட்டு கள் எழுந்தால், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யால் நடத்தப்படும் விசாரணையின் அடிப் படையில் அவரை பதவியில் இருந்து நீக் கும் அதிகாரம் அரசுக்கு இருக்கும் என்றும் வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. கேரள மாநில கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூல தனத்தை ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட் டுள்ளது. 2022-23ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள உதவி பெறும் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என்ற அளவில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் முனைப்பாக இருக்கும் வேளையில், துர்க்கியே கூடுதல் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. மேலும் அணுமின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யாவின் உதவியுடன் அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் சார்ந்த முடிவை துர்க்கியே எடுத்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாட்டின் பொதுத் தேர்தலை நடத்தத் தனது அரசாங்கம் தயாராகவே இருக்கிறது என்று லிபியாவின் பிரதமர் அப்துல் ஹமீது பேய்பா அறிவித்துள்ளார். அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தலை எதிர்கொள்ள எங்கள் தயார் நிலையைக் கேள்வி எழுப்புவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விரும்பும் அரசியல் ஏற்பாட்டை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்றம் அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் அபாயமான சூழலை உருவாக்கியிருப்பதாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போதுள்ள நிலையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், 2040 ஆம் ஆண்டில் கழிவுகளின் அளவு இரட்டிப்பாகி விடும் என்று தங்களின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். மற்ற நாடுகளைப் போலவே நுகர்வு மற்றும் அதன்பின் பிளாஸ்டிக்குகளை எங்கு கொண்டு செல்வது என்ற பிரச்சனையை தென் ஆப்பிரிக்காவும் எதிர்கொண்டு வருகிறது.