கடந்த 3 ஆண்டுகளில் 1.12 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ள தாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டசபையில் மைக்கை உடைத்த பாஜக எம்எல்ஏ லகேந்திர ரௌஷன் 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
“பாஜக - ஷிண்டே கூட் டணி அரசான மகாராஷ் டிரா அரசிடம் ஒரு சில தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன் களை தள்ளுபடி செய்ய பணம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு பணம் இல்லையா?” என மகா ராஷ்டிரா காங்கிரஸ் தலை வர் நானா படோலே கேள்வி எழுப்பியுள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி பொறி யியல் கல்லூரி செமஸ்டர் முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 5.54 லட்சம் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். நிர்ண யிக்கப்பட்ட எண்ணிக் கையை விட 1.29 லட்சம் கைதிகள் கூடுதலாகவே அடைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடாளு மன்றத்தில் தகவல் தெரி வித்துள்ளது. நாட்டில் சிறைகளில் அடைக்க நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை 4.25 லட்ச மாகும்.
பட்டியலின பிரிவில் உள்ளவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை தழு வினால் அவர்களை அதே பிரிவிலேயே வைக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய எந்த பரிந்துரையும் இல்லை; எனினும் இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் “அன்பு ஜோதி” ஆசிரமத்தில் காணாமல் போன 15 நபர்கள் தொடர்பாக விசா ரணை நடைபெற்று வரு வதாகவும், காணாமல் போனவர்களை கண்ட றிந்து அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் கால அவ காசம் வேண்டுமென சிபி சிஐடி சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரி க்கை விடுத்துள்ளது.
அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் தொடர்புடைய இந்துத்துவா அமைப் பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர் வாகி முத்துவேல் கைது. இவர் பள்ளி தாளாளரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப் பட்ட நிலையில், தற் போது கைது செய்யப் பட்டுள்ளார்.
தில்லி மெட்ரோ ரயில் களில் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்களால் சக பயணி களுக்கு தொல்லையாக இருப்பதாக புகார்.
உலகச் செய்திகள்
ரஷ்யாவிடம் இருந்து சுகோய்-35 போர் விமானங்களை வாங்கு வதற்கான உடன்பாட்டை ஈரான் எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எதிர்மறை அணுகு முறையால் மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகப்படுத்த ரஷ்யா தீர்மானித்தது. அந்த அடிப்படையில்தான் ஈரானுக்கு சுகோய் போர் விமானங்களை விற்க ரஷ்யா முடிவெடுத்திருக்கிறது. இராக்குடனான போர் நிறைவு பெற்றதில் இருந்தே போர் விமானங்கள் வாங்குவதில் நாங்கள் முனைப்போடு இருந்தோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை நடத்தும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்த இஸ்ரேலியக் குழுவிற்கு சவூதி அரேபியா அனுமதி மறுத்திருக்கிறது. இத்தகைய குழுக்களை அனுப்புவதன் மூலம் சவூதி அரேபியாவுடனான உறவை வளர்த்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மேலும், ஈரானுடன் சவூதி அரேபியா போட்டுள்ள உடன்பாடும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
கொரியப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் போர்ப் பயிற்சியில் தென் கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் போர்ப் பயிற்சிகளுக்கு வடகொரியா கடுமையான எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் நீர்மூழ்கிப் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என்று வடகொரியா அறிவித்துள்ளது.