states

சீர்காழி, தரங்கையில் குடும்ப அட்டைக்கு ரூ.1,000

சென்னை, நவ. 14- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - தரங்கம்பாடி வட்டங்களில் மழை யினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு வருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். திங்களன்று மயிலாடு துறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தர வினை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.