states

img

காந்தியை கொன்ற கோட்சே இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகனாம்- ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு!

காந்தியை கொன்ற கோட்சேவை இந்தியாவின் மதிப்புவாய்ந்த மனிதன் என கூறிய பாஜக ஒன்றிய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கோட்சேவை பாஜகவினர் தொடர்ந்து தேசபக்தர் போல காட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் , காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தியும், நாதுராம் கோட்சேவை புகழ்ந்தும் வருபவர்கள் சங்பரிவாரத்தினர்.

அந்த வகையில், சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா நகரில் ஒன்றிய பாஜக அமைச்சர் கூறியதாவது,தங்களை முகலாய மன்னர்கள் பாபர், ஒளரங்கசிப் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க முடியாது. கோட்சே காந்தியைக் கொன்றவர் என்றால்,அவரும்(கோட்சே)இந்தியாவின் மகன் தான்.பாபர் மற்றும் ஒளரங்கசிப் போன்ற ஆக்கிரமிப்பாளர் அல்ல என்று பேசியிருக்கிறார்.

மகாத்மா காந்தியின் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கோட்சேவை இந்தியாவின் மதிப்புவாய்ந்த மனிதன் என கூறிய பாஜக ஒன்றிய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

;