கொச்சி, நவ.14- கேரளத்தில் ஆலுவாவில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்ஃபாக் ஆல முக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ், கொலை குற்றத்திற்காக குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறாருக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் பிற போக்சோ பிரிவுகளின் கீழ் 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாட்சியங்களை சிதைத்ததற்காக 5 ஆண்டுகளும், குழந்தைக்கு போதை பொருள் கொடுத்ததற்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எர்ணாகுளம் போக்சோ நீதிமன்ற நீதிபதி கே.சோமன் குழந்தைகள் தினமான நவ.14 செவ்வாயன்று அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை, சித்ரவதை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளும், போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டு களும் சுமத்தப்பட்டன. இதில் 13 குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரிதானது என்றும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்ட னை வழங்க வேண்டும் என்றும் அர சுத் தரப்பு வாதிட்டது. தண்டனை யை அறிந்துகொள்ள குழந்தையின் பெற்றோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். கடந்த ஜூலை 28ஆம் தேதி 5 வயது சிறுமி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் கேரளாவை உலுக்கி யது. குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை அழைத்துச் சென்று ஆலுவா சந்தையின் கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் பாலியல் வல்லுறவு செய்து கொன்றார். பின்னர் உடலை சாக்கு மூட்டை யில் கட்டி குப்பையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். குழந்தையை காண வில்லை என்கிற பெற்றோரின் புகார் கிடைத்த சில மணி நேரங்களில் குற்ற வாளி கைது செய்யப்பட்டார். மறு நாள் காலை குழந்தை கொலை செய்யப்பட்டு வீசிய இடத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப் பட்டது. குழந்தையுடன் குற்றவாளி செல்லும் சிசிடிவி காட்சிகளும், சாட்சியங்களும் வழக்கில் முக்கியச் சான்றுகளாகும். சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜி.மோகன்ராஜ் நியமிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் சாதனை வேகத்தில் நடந்தன. குற்றம் நடந்த 35 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 4-ஆம் தேதி விசாரணை தொடங்கியது. 26 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 100 நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.