states

img

வயநாடு நிலச்சரிவு - ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்!

திருவனந்தபுரம்,ஜூன் 13- நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்ற ஒன்றிய அரசை நீதிமன்றம் கடுமையாக் கண்டித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வழக்கு விசாரணையில். கடனை தள்ளுபடி செய்ய முடியாது என  கேரள உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாகப் பதில் அளித்துள்ளது.
விசாரணையில் கடனை தள்ளுபடி செய்ய எங்களுக்கு உரிமை இல்லை என கூறி ஒன்றிய அரசு தரப்பினை, 73ஆவது பிரிவின் கீழ் அதற்கு அதிகாரம் உள்ளது. எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்ட விதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள்" என நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். 
மேலும் 2024 ஆம் ஆண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு எந்த விதியும் இல்லை என்று பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் 2025ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு நீதிபதிகள் ஜெயசங்கர நம்பியார், மனோஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது