திருவனந்தபுரம், ஏப். 27 - கேரளத்தில் பதினெட்டாவது மக்க ளவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தல் களம் இடது ஜனநாயக முன்னணிக்கே சாதகமாக இருப்பதாக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ‘இடது ஜனநாயக முன்னணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும்’ என, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
பினராயியில் (கண்ணூர்) வாக் களித்த பின்னர், ஊடகங்களுக்கு பேட்டியளித்த பினராயி விஜயன், “பாஜகவுக்கு எதிரான மக்கள் கோபாவேசத்தை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. நாட்டைப் பாது காப்பதற்கு இந்த தேர்தல் தங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான வாய்ப்பு என்பதை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளனர். கேரளத்தில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தா லும், பாஜக எந்தத் தொகுதியிலும் இரண்டாவதாகக் கூட வராது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கேர ளத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த இரண்டு குழுக்கள் உள்ளன. அதில் ஒன்று பாஜக. மற்றொன்று 18 எம்.பி.க்கள் கொண்ட யுடிஎப், இதற்கு எதிராக எதிர்வினையாற்றுவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலை கேரள மக்கள் பார்க்கின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்து தொகுதி களிலும் எல்.டி.எப் வேட்பாளர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எல்.டி.எப் வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடதுசாரிகள் குரல் வலுவாக ஒலிக்கும்: எம்.வி.கோவிந்தன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் அளித்திருக்கும் பேட்டி யில்: “கேரளத்தில் எல்.டி.எப். பெறும் இதிகாச வெற்றியானது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும். மக்கள் தீர்ப்பு எல்.டி.எப் அரசுக்கு சாதகமாகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் வரும்” என்று தெரிவித்துள்ளார். வெள்ளியன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், “கடந்த ஐந்தாண்டு களில் கேரளத்தின் குரல் நாடாளு மன்றத்தில் கேட்கவில்லை. நாடாளு மன்றத்தில் கேரளத்தின் குரலை எழுப்ப இடதுசாரி எம்.பி.க்கள் வலு வான எண்ணிக்கையில் இருப்பார்கள். அரசியலுக்கு பதிலாக ஆபாசமாக பிரச்சாரம் செய்தவர்களை மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துள்ளனர்” என்றும் எம்.வி. கோவிந்தன் கூறி யுள்ளார்.