பாலக்காடு, ஜூன் 11- தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ், சரித் ஆகியோருக்கு ஒன்றிய அரசு நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சொப்னா சுரேஷுக்கும், சரித்துக்கும் ஒன்றிய அரசின் நிதியிலி ருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. மூச்சுக்கு மூச்சு தேசபக்தி குறித்து பேசும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள எச்ஆர்டிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டு இந்த பெருந்தொகையை சொப்னா சம்பளமாக பெறுகிறார். குடும்பஸ்ரீக்கு ஒன்றிய அரசு வழங்கும் தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் மூலம் எச்ஆர்டிசி நிதி பெறுகிறது. அதிக சம்பளத்துடன் கார், அடுக்கு மாடி சொகுசு வீடு உள்ளிட்ட வசதிகளும் சொப்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பிலேயே கருத்து வேறுபாடு உள்ளது. காசு கொடுத்து துரோகிகளை பாதுகாப்பது தான் குற்றம் என்கின்றனர் ஒரு பிரி வினர். தங்கம் கடத்தல் வழக்கின் பின்ன ணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இருப்பதாக மக்கள் கருதுவதில் தவ றில்லை என்பதையே சொப்னா, சரித் போன் றோருக்கு ஆர்எஸ்எஸ் அளிக்கும் ஆதரவு வெளிப்படுத்தும் செய்தியாகும்.