நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பல தூதுக்குழுக்களாக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் அமைச்சர் பி.ராஜீவ். ஆனால், அப்போதெல்லாம் இவ்வளவு பரபரப்பான சந்திப்புகள் இருந்ததில்லை. காலையிலோ இரவு நேரத்திலோ தவிர எந்த நகரத்தையும் பார்க்கவும் நடக்கவும், ஓய்வெடுக்கவும் நேரமில்லாமல் இருப்பது இதுவே முதல் முறை என்று அனுபவத்தை விவரித்துள்ள முகநூல் குறிப்பு. வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக எழுதா மல் ஒரு நீண்ட பதிவு. தினமும் இப்படி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமில்லை என்பதே நிதர்சனம். லண்டனில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் இந்த பதிவு எழுதப் படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பல தூதுக்குழுக்களாக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நார்வே உள்ளிட்ட ஸ்காண்டி நேவிய நாடுகளுக்கு சபாநாயகர் தலைமை யிலான நாடாளுமன்றக் குழுவின் ஒரு அங்கமாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் ஒரு பகுதியாகவும் சென்றேன். பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் சபா நாயகர் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. ஆனால், இவ்வளவு பர பரப்பான பயணத் திட்டத்தில், காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ தவிர, எந்த நகரத்தையும் சுற்றிப் பார்க்கவோ, ஓய்வெடுக்கவோ நேரமில்லாமல் இருப்பது இதுவே முதல் முறை. அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை 3.55 மணிக்கு ஒஸ்லோவுக்கு விமானம் புறப்பட்டது.
மதியம் 2:30 மணியளவில் விமானம் அங்கு தரையிறங்கி நேராக ஹோட்டலுக்கு சென்று, 4 மணிக்குள் செக் இன் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு இந்திய தூதரின் இரவு உணவு மற்றும் விரிவான கலந்துரையாடல். 5ஆம் தேதி காலை பத்து மணியளவில் நார்வேயின் கடல் தொழில் மற்றும் சமுத்திரக் கொள்கை அமைச்ச ருடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதைகளில் மீன் வளர்ப்பதற்கும், ஆழ்கடல் மீன்பிடிக்க மேம்பட்ட ஏ1 அமைப்புகளைப் பயன்படுத்து வதற்கும் ஒத்துழைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். மதியம் 12.30 மணிக்கு விடுதிக்கு திரும்பி னோம். அங்கு மீன்வளம் தொடர்பான ஐ.நா ஆலோசகர் எரிக் ஹெம்பலுடன் கலந்துரை யாடினோம். மீன்வளத்துறை அமைச்சரும், துணைவேந்தரும் சேர்ந்து செயல் திட்டத்தை தயாரித்தனர். நார்வே நிபு ணர்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கும் பயிலரங்கம் கேரளாவில் நடத்த வும் முடிவு செய்யப்பட்டது. நார்வேஜியன் ஜியோடெக்னிகல் இன்ஸ்டிடியூட்டுக்கு மதியம் இரண்டு மணிக்கு சென்று, அங்கு நான்கு மணி வரை இருந்தோம். பேரிடர் மேலாண்மை, சுரங்கப்பாதை அமைத்தல் மற்றும் கடலோர அரிப்பு ஆகிய துறைகளில் கேரளாவுடன் இணைந்து பணியாற்ற நார்வேஜியன் ஜியோடெக்னிகல் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஏழு கிலோமீட்டருக்கு கீழே உள்ள பாறையின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் லடாக்கில் பயன்படுத்தப்படுகிறது. நார்வேயில் 23 கி.மீ நீளம் கொண்ட இதுபோன்ற நூற்றுக் கணக்கான சுரங்கப்பாதைகள் இணையும் ரவுண்டானாக்களுடன் உள்ளன.
கேரளா வில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் குறித்து விளக்கிய முதல்வர், என்ஜிஐயின் திட்டங்கள் கேரளாவுக்கு உதவும் என்றார். வெள்ள வரைபடத்தில் தேவையான தொழில்நுட்ப ஆலோச னைகளையும் வழங்க முடியும் என்று என்ஜிஐ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்தில் ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள பி.ராஜீவ் 31 நிகழ்ச்சிகளுக்குப் பிறகு 12ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து கேரளாவுக்கு புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.