states

img

திருவனந்தபுரம் பூஜாப்புரா சிறையில் 245 பேருக்கு கோவிட்

திருவனந்தபுரம், ஜன.23- திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புரா மத்திய சிறையில் 245 கைதிகளுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 239 கைதிகள் மற்றும் 9 ஊழியர்களு க்கு கோவிட் நோய் உறுதி செய்யப்பட்டுள் ளது. பாதிக்கப்பட்ட கைதிகள் சிறப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக சிறையில் இருந்த 961 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூஜாப் புரா சிறைக் கைதிகளுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநி லத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சோதனை நடத்த சிறைத்துறை உத்தர விட்டது.

;