states

img

தங்க கடத்தலில் மீண்டும் குற்றச்சாட்டுகள் சதித்திட்டத்தின் ஒரு பகுதி : கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஜுன் 8- தங்கக் கடத்தல் வழக்கில் ஒரு இடை வெளிக்குப் பிறகு, வழக்கில் குற்றம்  சாட்டப்பட்டவர்கள் பழைய விஷயங் களையே மீண்டும் கூறுகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இது  சிலரது அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை எப்போதும் மக்கள் நிராகரித்து வந்துள்ளதாக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளார். கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ், இந்தப் பிரச்சனையில் மீண்டும் முதலமைச்சர் பினராயி விஜயன் மீது திட்ட மிட்டு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதே சொப்னா சுரேஷ் உள்ளிட்டோர், ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கப் பிரிவும் தேசிய  புலனாய்வு முகமையும் மீண்டும் மீண்டும்  தன்னை நிர்ப்பந்தப்படுத்தி பினராயி விஜயன் மீது குற்றம்சாட்டுமாறு கட்டாயப் படுத்துவதாக பகிரங்கமாகக் கூறியவர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த நிலை யில் திடீரென கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் பினராயி விஜயன் மீதும் முந்தைய இடது  ஜனநாயக முன்னணி அரசின் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் மீதும் சொப்னா சுரேஷ்  வாக்குமூலம் என்ற பெயரில் ஊட கங்களில் குற்றச்சாட்டுக்கள் பரப்பப் பட்டுள்ளன.  இதுதொடர்பாக முதலமைச்சர்  பினராயி விஜயன்  தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நீண்டகாலமாக பொது தளத்தில் மக்களுடன் இருந்து, பொது வாழ்வில் முன்னேறி வருபவர்கள் மீது இதுபோன்ற மலி வான குற்றச்சாட்டுகளை கூறுவது சதியின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது. பழைய  குற்றச்சாட்டுகளை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர் களுக்கு நமது சமூகம் பதில் சொல்லும் என்று  நம்புகிறேன். காட்சி ஊடகங்கள் மூலம், சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் களின் சில குறிப்புகள் கவனத்திற்கு வந்தன. தங்கம் கடத்தல் முறைகேடு தொடர்பாக ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள விசாரணை நடத்துமாறு ஒன்றிய அரசிடம் முதலில் கோரிக்கை வைத்ததே கேரள அரசு தான். விசாரணை முறைகள் பற்றிய நியாய மான கவலைகள் உரிய நேரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக் கும் பொருளாதாரக் குற்றங்களின் மூலத் தைக் கண்டுபிடிப்பதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தும் எமக்கு எதிராக குறுகிய அரசியல் காரணங் களுக்காக சில தரப்பிலிருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் முன் வைக்கப்படுகின்றன. மீண்டும் பொய் களைப் பரப்புவதன் மூலம் இந்த அரசாங்கத் தின் மற்றும் அரசியல் தலைமையின் நம்பகத் தன்மையை சீர்குலைத்துவிடலாம் என்று நினைத்தால் அது வீண் என்பதை சம்மந்தப் பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கேரளாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக வும், சமூக நலனுக்காகவும் பாடுபடும் இடது சாரி ஜனநாயக முன்னணி அரசை இழிவு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற பிரச்சாரத்தை மக்கள் நிராகரிப்பார்கள் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எல்டிஎப் அரசாங்கத்தை இழிவுபடுத்த சதி

சொப்னா சுரேஷின் புதிய தகவல்கள் என்ற பெயரில் பரப்பப்படும் பொய்கள் இடதுசாரி ஜனநாயக முன்னணியையும், அரசையும் இழிவுபடுத்தும் சதியின் ஒரு பகுதியாகும் என எல்.டி.எப். அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து ஆட்சி செய்து, கடந்த ஓராண்டாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை நிறை வேற்றுவதில் முன்னிலை வகித்து வரு கிறது. இந்த நிலையில், இதுபோன்ற விவா தங்களில் மக்களின் கவனத்தை திசை  திருப்பும் வகையில் அரசை வழிநடத்தும் முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் கள மிறங்கியுள்ளனர். ஒரு ரகசிய வாக்கு மூலத்தை பதிவு செய்த உடனேயே ஊடகங் களுக்கு அம்பலப்படுத்துவது அரசியல் சதியின் ஒரு பகுதியாகும். முதலமைச்சரை சிக்க வைக்க அமலாக்கத்துறை அதிகாரி கள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக முன்பு தெரிவித்தவர்களும் இவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களை வெளியே கொண்டு வர  வேண்டும் என  இ.பி.ஜெயராஜன் தெரி வித்துள்ளார்.

போலீஸில் கே.டி.ஜலீல் புகார்

இதனிடையே தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ் மீது கேரள முன்னாள் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் போலீசில் புகார் அளித்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் சொப்னாவின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளது எனவும், விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் கே.டி.ஜலீல் தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.