states

img

கொரோனா அதிகமில்லை என்றாலும் முகக்கவசம் கட்டாயம்:கேரள சுகாதாரத் துறை

கேரளத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என்றாலும், முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் ஆலோசக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், நோய் பரவல் தற்போது அதிகமாக இல்லை என்றாலும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்பட நிபந்தனைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கேரளத்தில் எர்ணாகுளத்தில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. அங்கு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.