திருவனந்தபுரம், மார்ச் 7-
நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளத்தை கேரளம் அறிமுகப்படுத்தியுள்ளது. சி ஸ்பேஸ் என்கிற இந்த சினிமா இயங்குதளத்தின் செயல்பாடுகளை திருவனந்தபுரம் கைரளி திரையரங்கில் முதல்வர் பினராயி விஜயன் வியாழனன்று (மார்ச் 7) துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் தனது தொடக்க உரையில், “கலை மதிப்புள்ள திரைப் படங்களைக் காண்பிக்கும் நோக் கத்துடன் சி ஸ்பேஸ் ஓடிடி தளத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது மலையாள சினிமாவின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் ஏது வாக இருக்கும். ஓடிடிகள் பொழுது போக்கு நடைமுறைகளை மாற் றும் ஒரு புதிய வகையாகும். திரைப் படத் தொழில்நுட்பம், திரையிடல் மற்றும் மகிழ்ச்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெளி யில் திரையிடப்பட்ட படங்கள் பின் னர் திரையரங்குகளையும் வீடு களையும் வந்தடைந்தன. இறுதி யாக, படம் கைகளை எட்டும் விதத் திற்கு மாறியது. திரையிடல் மூலம் லாபம் ஈட்டிய படங்களேயே பரி சீலிக்கும் முறை இப்போது உள் ளது. உள்ளூர் அளவிலான படங் கள் பெரும்பாலும் கவனிக்கப் படாத நிலை இப்போதும் உள்ளது. அரசாங்கத்தின் ஓடிடி தளம் இதற்கு ஒரு தீர்வாக அமையும்.
நீங்கள் பார்க்கும் படத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சி ஸ்பேஸ் செயல்படுகிறது. முதற்கட்டமாக 42 படங்கள் திரையிடப்படும். இது 35 திரைப்படங்கள், 6 ஆவணப் படங்கள் மற்றும் 1 குறும்படம் ஆகி யவற்றைக் கொண்டுள்ளது. பல விருதுகளை வென்ற ‘நிஷிதோ’ மற்றும் ‘பி 32 டு 44’ ஆகிய படங் கள் சி ஸ்பேஸ் மூலம் ஒளிபரப்பப் படும். திரையரங்குகளில் வெளியா கும் படங்களை திரையரங்குகளுக்கு வழங்காமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது திரையுலகில் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக தயா ரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள் ளதால், திரையரங்கு களில் வெளி யான படங்கள் சி ஸ்பேஸில் திரை யிடப்படும்.
சி ஸ்பேஸ், கேஎஸ்எப்டிசி (கேரள மாநில திரைப்பட வளர்ச்சி கழகம்) யால் நிர்வகிக்கப்படுகிறது. கேஎஸ்எப்டிசியானது, திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தோஷ் சிவன், ஷியாம பிரசாத், சன்னி ஜோசப், ஜியோ பேபி மற்றும் எழுத் தாளர்கள் ஓ.வி. உஷா மற்றும் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய 60 பேர் கொண்ட க்யூரேட்டரியல் கமிட்டியை சி ஸ்பேஸிற்கான திரைப் படங்களைத் தேர்ந்தெடுத்து ஒப்பு தல் அளிக்க அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் சி ஸ்பேஸில் சமர்ப் பிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் கலை மற்றும் கலாச்சார உள்ளடக்கத்தை மதிப்பிடுவார்கள். அவர்களால் பரிந்துரைக்கப்படும் திரைப்படங் கள் மட்டுமே இத்தளத்தில் திரை யிடப்படும். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற திரைப்படங்கள் க்யூரேஷ னின்றி திரையிடப்படும்.
லாப வரம்புகளில் வெளிப் படைத்தன்மை மற்றும் பார்வையா ளர்கள் மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் ஆகியவை சி ஸ்பேசின் அடையாளங்களாகும். கட்டணம் செலுத்தும் அடிப்படையில், சி ஸ்பேஸ் ஒரு திரைப்படத்தை ரூ. 75க்கும், குறும்படங்களை குறைந்த விலைக்கும் வழங்கும். வசூலிக்கப் பட்ட தொகையில் பாதியை தயா ரிப்பாளர் பெறுவார். இன்று முதல், வாடிக்கையாளர்கள் சி ஸ்பேஸ் (C Space) செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் (App Store) வழியாக பதிவிறக்கம் செய்ய லாம்.
சி ஸ்பேஸ் தீவிர திரைப்பட பார்வையாளர்கள், திரைப்படம் கற்பவர்கள், கேரள கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. சி ஸ்பேஸ் மூலம் கல்லூரிகளில் பிலிம் கிளப்களை ஊக்குவிக்கும் திட்டமும் உள்ளது. சி ஸ்பேஸ் ஆனது, க்ரவுட் ஃபண் டிங்கில் ஒரு புதிய நடைமுறையை முன்னோடியாகக் கொண்டுவர விரும்புகிறது, தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களைப் பார்க் கும் பார்வையாளர்களின் ஆதர வின் மூலம் அவர்களின் தயாரிப்புச் செலவை ஈடுகட்ட வாய்ப்பளிக்கி றது. திரைப்பட தயாரிப்பாளர் களின் நலனுக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது” என முதல்வர் தெரிவித்தார்.