திருவனந்தபுரம், ஆக. 30 - கேரள மாநிலம் வயநாடு பேரழி வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத வும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் (TNGEA) சார்பில் உண்டியல் மூலம் நிதி சேகரிக்கப் பட்டது. இவ்வாறு தமிழ்நாடு முழு வதும் சேகரிக்கப்பட்ட ரூ. 31 லட்சத்து 442-ஐ கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் காசோலை யாக வழங்கினர்.
கேரள மாநில தலைமைச் செய லகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், அரசு ஊழியர் சங்கத்தின் மாநி லத் தலைவர் (பொ) சா. டேனியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் ஆ. செல்வம், பொருளாளர் மு. பாஸ்கரன், மாநில துணைத் தலை வர்கள் மொ. ஞானத்தம்பி, ஆ. பெரிய சாமி, மு. செல்வராணி, துணைப் பொதுச்செயலாளர் மு. சீனிவாசன், மாநிலச் செயலாளர்கள் உ. சுமதி, ச. ஹேமலதா, ஆ. அம்சராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.