திருவனந்தபுரம், செப்.12- இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கேரள முதல்வர் பினராயி விஜயனை சட்டப்பேர வை அறையில் சந்தித்துப் பேசினார். கொரோனா காலத்தில் கேரளத்தின் செயல்பாடுகளை அவர் பாராட்டினார். லைஃப் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கா னோருக்கு வீடுகள் வழங்கப்பட்டதையும், ஊழல் குறைந்த மாநிலமாக கேரளம் மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், கேரளம் மாதிரி வளர்ச்சிக்கு தலைமை தாங்கி வரும் முதல்வர் என்றும் இலங்கை ஆளுநர் பாராட்டினார்.