states

img

யானைகளை சுட்டுக் கொல்லுவோம் சி.பி.மேத்யூ-வின் பேச்சு சரியானது அல்ல! வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கருத்து

இடுக்கி, பிப்.5- குடியிருப்புப் பகுதிகளில் வரும் காட்டு யானைகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரின் பேச்சு மக்களை ஆத்திரமூட்டுவதாகவும், சட்டத்திற்கு சவாலாக உள்ளது எனவும் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறினார். இடுக்கியில் குடியிருப்பு பகுதிகளில் பீதியை பரப்பும் காட்டு யானைகளை பிடிக்காவிட்டால் சுட்டுக் கொல்லுவோம் என சிபி மேத்யூ அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் யானையின் நெற்றியில் சுடும் நண்பர்கள் தனக்கு இருப்பதாகவும், சட்டவிரோதமாக இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து யானைகளை சுட்டுக் கொல்வதாகவும் டிசிசி தலைவர் கூறியுள்ளார். பொறுப்பற்ற கருத்துக்களை கூறி சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இடதுசாரி அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்டு யானைகளைப் பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் சட்ட விரோதமாக செயல்பட முடியாது என அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.