states

img

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு... பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்....

திருவனந்தபுரம்
கடந்த 1992-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் அபயா என்ற 19 வயது இளம் கன்னியாஸ்திரி கிணற்றில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தொடக்க விசாரணை நடத்திய கோட்டயம் போலீசார் மற்றும் குற்ற புலனாய்வு துறை இது தற்கொலை என அறிக்கை வெளியிட்டு வழக்கை முடித்து வைத்தது. 

பின்னர் சந்தேக வழக்காக உயர்நீதிமன்றத்துக்கு செல்ல வழக்கு (1993-ம் ஆண்டு) சிபிஐ வசம் சென்றது. அந்த விசாரணையில் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 2007-ஆம் ஆண்டு சிபிஐ மூலம் புதிய குழு விசாரணை தொடங்கப்பட்டது.  தீவிர விசாரணைக்கு பின்னர் 2008-ம் ஆண்டு  பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  
விசாரணை முடிவில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கான இடையிலான கள்ளக்காதல் விவகாரம் கன்னியாஸ்திரி அபயாவுக்கு தெரிந்ததால் அவரை  கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பல்வேறு சிக்கல்களுக்கு இடையே 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று பிற்பகல் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும், வழக்கின் 2-வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அறிவித்தது.