கோழிக்கோடு, ஜூன் 25- கேரள என்ஜிஓ யூனியன் 61ஆவது மாநில மாநாடு கோழிக்கோடு நகரில் ஜூன் 22 சனிக்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. கடப்புரம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஜூன் 23 ஞாயிறன்று நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். ‘கூட்டாட்சியை உடைக்கும் ஒன்றிய அரசும், தற்காக்கும் கேரளாவும்’ என்ற தலைப்பில் அமைச்சர் கே.என்.பாலகோபால், ‘புதிய கேரளமும் சிவில் சர்வீஸ் சீர்திருத்தமும்’ என்ற தலைப்பில் அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாநிலத் தலைவர் எம்.வி.சசிதரன் கொடி ஏற்றினார். பொதுச் செயலாளர் எம்.ஏ.அஜித்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். 933 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.திங்களன்று நடைபெறும் சகோதர அமைப்புகளின் கூட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் டி.பி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.