states

கேரள தலைமைச் செயலக ஊழியர் சங்க மாநாடு

திருவனந்தபுரம், அக்.20 - கேரள மாநில அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் 48வது ஆண்டு மாநாடு 2021 அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவனந்தபுரம் ஏ.கே.ஹால் மற்றும் ஹஸன் மரைக்காயர் ஹாலில் நடைபெறும். இம்மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். எஃப்.எஸ்.இ.டி.ஒ.பொதுச் செயலாளர் அஜித்குமார் வாழ்த்துரை வழங்குகிறார். சங்கப் பொதுச் செயலாளர் கே.என்.அசோக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் கல்லுவிளா அஜித் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைக்கின்றனர்.

;