states

img

அறிவியலை பாதுகாக்க மக்கள் இயக்கம்

திருவனந்தபுரம், ஜன.17 - அறிவியலைப் பாதுகாக்க மாபெரும் மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என் றும், தவறான சிந்தனைகள், வெறுப்பு எண்ணங்கள், மூடநம்பிக்கைகள், மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக புதிய போராட்டக் களம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரம் தோந்நக்கல்லில் உள்ள உயிர் அறிவியல் பூங்காவில் (Life science Park), உலகளாவிய அறிவியல் திரு விழா (Global Science Festival) கேரளம் நிகழ்ச்சியை அவர் திங்களன்று (ஜன.15) தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: அறிவியலைப் பாதுகாக்க போராடு வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமக னுக்கும் அரசமைப்புச் சட்டம் உரிமை  வழங்கி யுள்ளது.

உண்மையான தேசபக்தர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசமைப்பு சாசனத்தின் 51ஆவது பிரிவு அறிவியல் நுண்ணறிவை வளர்ப்பதன் அவ சியத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் அந்த  அரசியல் சாசனத்தின் கீழ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களில் சிலர் அறிவியல் நுண்ணறிவை அழிக்கும் பகுத்தறிவற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இது போன்ற பல முட்டாள்தனங்கள் பரப்பப்பட்டு வரும் இந்த நேரத்தில் கேரளம் தனது அரசமைப்பு சாசனப் பொறுப்பை ஏற்கிறது. உலகளாவிய அறிவியல் திருவிழா இதற்கு சிறந்த உதாரணம். கேரளத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிவியல் பிரச்சார அமைப்புகளைச் செயல்படுத்தி, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அவற்றை உருவாக்குவதே மாநில அரசின் நோக்கம்.

36 ஆவது அறிவியல் காங்கிரஸ்?
உலகளாவிய அறிவியல் திருவிழா கேர ளம் என்பது அறிவியல் கல்வி, அறிவியல் விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு தகவல் தொடர்புக்கான சர்வதேச திருவிழா ஆகும். 36ஆவது அறிவியல் காங்கிரசுக்கு கேரளம் தயாராகி வரும் நிலையில், உலகளாவிய அறிவியல் திருவிழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வான இந்திய அறிவியல் காங்கிரஸ் நடைபெறுமா என்பது தெரியவில்லை.

அதற்கு இது வரை அனுமதி இல்லை. இத்தகைய பொது வான தேசிய சூழ்நிலையில்தான் அறி வியலை ஊக்குவிக்கவும், அறிவியல் விழிப்புணர்வை அதிகரிக்கவும் கேரளம் எடுத்த முயற்சிகள் பொருத்தமானதாகிறது. அறிவியல் விழிப்புணர்வு, விமர்சனப் பூர்வ ஆராய்ச்சி மற்றும் பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை உருவாக்கி, சமூகம் முழுவதும் பரப்ப வேண்டிய சிறப்பான கட்டத்தை நாம் கடந்து வருகிறோம். நாட்டில் மதச்சார்பற்ற மாண்புகள் தாக்கப்படு கின்றன. சமூகத்தில் மதவெறியை உரு வாக்க ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

மதம், சாதி, சமூகம், பிரதேசம், மொழி, கலாச்சாரத்தின் பெயரால் நமது ஒற்று மையையும், ஒருமைப்பாட்டையும் சிதைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய நகர்வுகள் அறிவியலையும் அறி வியல் சிந்தனையையும் பின்னுக்குத் தள்ளவே உதவும். எனவே, இதுபோன்ற உணர்வுப்பூர்வமான முயற்சிகளை முளை யிலேயே நசுக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக அறிவியல் உணர்வுள்ள - அறிவியல் அடிப்படையி லான சமூகத்தை தவறாக வழிநடத்துவது கடினம். அதனால்தான் சில அதிகார மையங் கள் சமூகத்தில் அறிவியல் வேரூன்றுவதைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.

கெட்ட எண்ணங்கள், வெறு ப்பு எண்ணங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் தீய பழக்கவழக்கங்களை பரப்பி மக்களிடையே பாதுகாப்பின்மையை உருவாக்க முயல்கின்றனர். இருப்பினும், கேரளத்தில் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை, ஏனென்றால் நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவியல் உணர்வில் சிறப்பு கவனம் செலுத்தினோம்.

வேரூன்ற முடியாத வெறுப்பு அரசியல்
ஒரு சமூகமாக நாம் ஒன்றாக நின்று  அறிவியலுக்கு எதிரானவர்களை தோற் கடிக்கிறோம். அது அவர்களுக்குப் பின்னால்  இருப்பவர்களை வருத்தமடையச் செய் கிறது. இந்த அறிவியல் அடிப்படை இங்கு  இருப்பதால்தான் வெறுப்பு அரசியல் இங்கு வேரூன்றவில்லை. மூடநம்பிக்கை களுக்கும் மூடப்பழக்க வழக்கங்களுக்கும் எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, உயர்மட்ட அதிகாரிகளிடத்திலும் சிலர் அறிவியலற்ற விசயங்களைப் பரப்பி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

அதி காரப் பதவியில் இருந்த ஒரு முக்கிய மனி தர் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராகப் பேசி னார். மற்றொருவர் பூமி தட்டையானது என்றார். பிளாஸ்டிக் சர்ஜரி நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது என்றும், ஆக்சி ஜனை உள்ளிழுத்து வெளியேற்றும் விலங்கு பசு என்றும் சிலர் சொன்னார்கள். இவ்வாறு, அறிவியல் பூர்வமற்றவற்றை பொறுப்பான வர்கள் தெரிவித்துள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள் அல்ல பள்ளிக்கூடங்கள் தேவை என்று போதித்த நாடு இது. விஞ்ஞானி கள் அல்ல, மாறாக அறிவியலை பார்வை யாளராக வைத்து மனிததெய்வங்கள் இப்போது போற்றப்படுகின்றன. நாட்டை முன்னேற்ற அறிவியல் அல்ல, மதம் தேவை என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படு கிறது. இவற்றின் இறுதி முடிவு சுதந்திரம் அல்ல, சுதந்திரமின்மையே. அதற்கான ஆயத்த கட்டத்திலேயே அறிவியல் விழிப் புணர்வையும் பகுத்தறிவு சிந்தனையையும் வளர்க்க நாம் பாடுபட வேண்டும்.

அறிவியல் உணர்வுள்ள தலைமுறை

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற் றத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை நுணுக்க மாக ஒருங்கிணைத்து, மாநில மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்துவதே மாநில அரசின் பார்வை. நாட்டின் வளர்ச்சிக்கு அறி வியலையும், தொழில்நுட்பத்தையும் திறம்பட பயன்படுத்துவதோடு, சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெரும் கடமையையும் செய்ய வேண்டும். அறிவியல் உணர்வுள்ள தலைமுறையே நாட்டின் செல்வம். அவர்களால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும்.

அறிவியல் உணர்வுள்ள சமுதாயத்தை தட்டு கொட்டியும் சுடர் ஏற்றியும் வளர்க்க முடி யாது. இது போன்ற தவறுகளை பொறுப்புள் ளவர்கள் நாடு முழுவதும் பரப்பும் போது, அவற்றின் பொய்யை அம்பலப்படுத்திட தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விளக்கம் தருவது அறிவியலில் அக்கறை கொண்டவர்களின் சமூகப் பொறுப்பாகும். அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும். வேற்றுமை எண்ணங்கள், பழக்கவழக்கங் கள், வெறுப்புக் கொள்கைகள், மூடநம்பி க்கைகள் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக பொது மக்களின் மனசாட்சியை விழிப்படையச் செய்ய முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

காலத்தின் தேவை அறிவியல்

பொது மக்களை நோக்கி செயல்படு வதை அறிவியல் சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அறிவியலை அன்றாட வாழ்க்கை, அரசியல், வளர்ச்சி தொடர்பாக முன்வைக்க வேண்டும். அறிவியல் அறிவை சமுதாய நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அறிவியல் அறிவியலுக்காக அல்ல, சமூகத்திற்காக. சமுதாயத்திற்கு நன்மை செய்யாத அறிவியலால் எந்தப் பயனும் இல்லை. அறிவியலின் வெற்றி அது  சமூகத்திற்குச் சேவை செய்யும் இடமாகும். அறிவின் உலகளாவிய விநியோகம் அதற்கு அவசியம். மக்களுக்கான கலைகளைப் போலவே, அனைத்து மக்களும் அணுகக் கூடிய வகையில் அறிவியலைப் பரப்பு வதற்கான கடினமான பணி மேற்கொள்ளப் பட வேண்டும்.

அறிவியலை பிரபலப்படுத்துவது காலத்தின் தேவை. இந்த வகையில் மாநில அரசு அவ்வப்போது தலையிட்டு வருகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆதாயம் தேடும் கருவியாக இருக்கக்கூடாது. மாறாக நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். மனித துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டவும், நியாயமான உலகத்தை உருவாக்கவும் நம்மால் முடியும். உயிர் அறிவியல் பூங்கா வில், உலகளாவிய அறிவியல் திருவிழா  போன்ற கண்காட்சிகளுக்கு நிரந்தர இடம் அமைக்க அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

விழாவுக்கு நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தலைமை வகித்தார். நாசா வின் முன்னணி திட்ட விஞ்ஞானி டாக்டர்.  மதுலிகா குஹதகுர்தா சிறப்புரையாற்றி னார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், முதல்வரின் அறிவியல் ஆலோசகர் எம்.சி.தத்தன், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செய லாளர் டாக்டர். எஸ். பிரதீப்குமார், உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.