திருவனந்தபுரம், ஏப்.25- விவசாயத் தொழிலாளர்களின் அகில இந்தியத் தலைவரான சுனீத் சோப்ரா, எப்போதும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய நல்ல கம்யூ னிஸ்ட் என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழஞ்சலி செலுத்தினார். திருவனந்தபுரம் அய்யங்காளி மண்டபத்தில் கே எஸ் கே டி யு (கேரள விவசாய தொழிலாளர் சங்கம்) மாநிலக்குழு ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் கூட்டத்தை ஞாயிறன்று முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் கேரளா வந்தபோது கேரளத்தில் வாழ விரும்புவதாக நேர டியாக தெரிவித்தார். இங்கு வாழ்ந்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசை. அவர் எப்போதும் மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தலை வர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பின ராக நீண்ட காலம் பணியாற்றிய சுனீத், வெகுஜன அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளையும் ஆர்வத்துடன் ஏற்றுச் செயல்பட்ட ஆளுமை. வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொருளாளராக இருந்த காலம் முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு வருவது வழக்கம். கேரளாவில் சிபிஎம் அமைப்பு செயல்பாடுகளில் ஆர்வமாக இருந்தார். கட்சியின் நல னைக் காத்த நல்ல கம்யூனிஸ்ட் சுனீத் சோப்ரா என்று முதல்வர் கூறினார்.
தனித்துவம் மிக்க ஆளுமை : ஏ.விஜயராகவன்
சுனீத்தின் படைப்பு மனப் பான்மையே அவரை தனித்துவம் மிக்க ஆளுமையாக்குகிறது என்று அவரு டன் நீண்ட காலமாக இணைந்து பணி யாற்றிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.விஜய ராகவன் கூறினார். நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளில் பய ணித்த தோழர். மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்து, வெளிநாடு உட்பட மிக உயர்ந்த கல்வியைப் பெற்ற சுனீத், உலகின் அனைத்து புரட்சிகர இயக்கங்களுடனும் தொடர்புடைய ஒரு தோழர். அவரது பயணம் மிகவும் வளமான பின்னணியில் இருந்து ஒரு ஆச்சரியமான பாதையில் இருந்தது. சுனீத் எந்த சூழ்நிலையிலும் தோழர் களுடன் இருக்க விரும்புபவராக இருந்தவர் என்றும் விஜயராகவன் கூறினார். அய்யங்காளி மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்து க்கு கேஎஸ்கேடியு மாநிலத் தலைவர் என்.ஆர்.பாலன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆனாவூர் நாகப்பன் இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலர் டாக்டர். வி.சிவதாசன், துணைத் தலைவர் கே.கோமளகுமாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வி.ஜாய், விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.