கொடிய வறுமை இல்லாத மாநிலம் ஆகிறது கேரளம்
முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல் கண்ணூர், ஏப்.15- நாட்டிலேயே கொடிய வறுமை இல் லாத மாநிலமாக கேரளம் நவம்பர் 1 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். முதலாவதாக, கேரள முதல்வர் பின ராயி விஜயன் வெற்றிபெற்ற தர்மடம் சட்ட மன்றத் தொகுதி, மாநிலத்தின் கொடிய வறுமை இல்லாத தொகுதியாக ஏப்ரல் 13 அன்று அறிவிக்கப்பட்டது. பினராயி கிரா மத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் முதல மைச்சர் பினராயி விஜயன் இதற்கான அறி விப்பை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், நாட்டிலேயே கொடிய வறுமை இல்லாத மாநிலமாக கேரளம் நவம்பர் 1 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரி வித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கேர ளத்தை கொடிய வறுமையிலிருந்து விடு விப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தயா ரித்தது. கேரளத்தில் மிகவும் வறுமை யில் வாடும் மக்களின் எண்ணிக்கை ஒரு சத விகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. அரசாங்கம் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அவர்களை கொடிய வறுமை யிலிருந்து விடுவிக்க முடிவு செய்தது. இத்திட்டம் அதன் முதல் ஆண்டை எட்டியபோது ஒரு நேர்மறையான மாற்றம் ஏற்பட்டது. கேரளத்தில், 64 ஆயிரத்து 2 பேர் மிகவும் ஏழைகளாக அடையாளம் காணப்பட்டு, அவர்களை வறுமையிலி ருந்து மீட்க ஒரு நுண் திட்டம் தயாரிக் கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பாரா ட்டத்தக்க பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இது மனிதநேயத்திற்கும், சக மனி தர்கள் மீதான அக்கறைக்கும் ஒரு உன்னத மான எடுத்துக்காட்டு” என்றும் குறிப் பிட்டார். விழாவிற்கு அமைச்சர் ராமச்சந்தி ரன் கடன்னப்பள்ளி தலைமை தாங்கி னார். பிஏயு திட்ட இயக்குநர் எம். ராஜேஷ்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். வி. சிவதாசன் எம்.பி., மாவட்ட பஞ்சா யத்து தலைவர் கே.கே. ரத்னகுமாரி, தலைச்சேரி ஒன்றிய தலைவர் சி.பி. அனிதா, உள்ளாட்சித் துறை இணை இயக்குநர் டி.கே. அருண், ஊராட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.
வறுமை ஒழிப்பில் கேரள மாதிரி தர்மடம்
தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள எட்டு பஞ்சாயத்துகளும் ஏற்கனவே கொடிய வறுமை இல்லாதவையாக அறி விக்கப்பட்டுள்ளன. மிகவும் ஏழ்மையான வர்களைக் கண்டறிந்து சேவைகளை வழங்குவதற்காக இந்தத் திட்டம் ஆகஸ்ட் 2021 இல் தொடங்கியது. ‘ரைட் டு ஸ்விஃப்ட் அசிஸ்டன்ஸ்’ முன்முயற்சி மற்றும் நுண் திட்டங்களை அறிமுகப் படுத்தியதன் மூலம் இந்த இலக்கு நிறை வேறி உள்ளது. நுண் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள், குறுகிய காலத் திட்டங்கள், உடனடித் திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இதன்கீழ், எட்டு கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 196 குடும்பங் கள் பயன்பெற்றனர். கொடிய வறுமைப் பிரிவில் உள்ளவர்களுக்கு ரேசன் கார்டு கள், மாற்றுத் திறனாளி அட்டைகள், ஆதார் அட்டைகள், வங்கிக் கணக்கு கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதி யங்கள் போன்ற உரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டன. தேவையான சிகிச்சை கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. 20 பேருக்கு ஆதார் அட்டைகள், நான்கு பேருக்கு வேலை அட்டைகள், நான்கு பேருக்கு எரிவாயு இணைப்புகள், 31 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை கள், 12 பேருக்கு ரேசன் அட்டைகள், இரண்டு பேருக்கு சுகாதார காப்பீடு மற்றும் இரண்டு பேருக்கு பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தேவைப்படும் 79 குடும்பங்களில் 19 குடும்பங்களுக்கு பஞ்சாயத்துகள் மற்றும் குடும்பஸ்ரீ தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. சுகாதார சேவைகள் தேவைப்படும் 139 குடும்பங்களுக்கும் சுகாதார மையம் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மூலம் வழங்கப்பட்டது. வருவாய் ஈட்டுவதற் காக, பல்வேறு துறைகள், கிராம பஞ்சா யத்து திட்டம் மற்றும் குடும்பஸ்ரீயின் உஜ்ஜீவனம் திட்டம் மூலம் 20 குடும் பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது. வீடு தேவைப்படும் 83 பேரில், 27 பேருக்கு வீடு களும், ஆறு பேருக்கு லைப் திட்டத்தின் மூலம் வீடுகளும் நிலமும் ஒதுக்கப் பட்டன. கிராம பஞ்சாயத்து மூலம் 40 பேருக்கு வீடு புதுப்பிக்க நிதி ஒதுக்கப் பட்டது. மூன்று குடும்பங்களுக்கு கழிப் பறைகளும், ஒரு குடும்பத்திற்கு குடிநீர் இணைப்புகளும் வழங்குவதன் மூலம், பட்டியலில் உள்ள அனைத்து பயனாளி களின் கனவும் சாத்தியமாகியது.