திருவனந்தபுரம், ஜன.20- மாநிலங்களுக்கு வழங்க வேண் டிய நிதியை குறைக்க, நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மறைமுக நடவடிக்கை எடுத்ததாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதி காரி (சிஇஓ), பி.வி.ஆர். சுப்பிரமணி யம் தெரிவித்திருப்பது அதிர்ச்சி யும், கவலையும் அளிக்கும் அதே நேரத்தில், கேரள அரசின் குற்றச் சாட்டுக்கள் உண்மைதான் என நிரூ பிப்பதாக கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் கே.என். பாலகோபால் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: திட்டக் கமிஷனுக்குப் பதிலாக, மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டது ‘நிதி ஆயோக்’ அமைப்பாகும். அந்த நிதி ஆயோக்கின் தலைமை அதி காரியே, தங்களின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு சிதைப்பதாக தெரி வித்துள்ளார். மாநிலங்களுக்கான ஒன்றிய வரிப் பங்கீடு 42 சதவிகிதம் என் பதை, 32 சதவிகிதமாகக் குறைக்க ஒன்றிய அரசால் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது கவ லையை ஏற்படுத்துகிறது.
வரிப் பங்கீட்டைக் குறைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள சூழ் நிலையில் பல்வேறு மத்திய திட்டங்க ளுக்கான ஒதுக்கீட்டை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசின் பட் ஜெட்டை மாற்றி அமைத்ததாக தக வல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு, செஸ் மற்றும் கூடுதல் கட்ட ணம் பெரிய அளவில் உயர்த்தப்பட் டது. மத்திய வரி வருவாயில் 28 சத விகிதமாக செஸ் மற்றும் கூடுதல் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநி லங்களுக்கான மத்திய வரி ஒதுக் கீட்டைக் குறைக்கும் ரகசிய உத்தி யாக இது செயல்படுத்தப்பட்டது.
ஒன்றிய அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக கேரளம் எழுப்பி வரும் நிதி ஒதுக்கீடு குறைப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சரியானதுதான் என்பதை நிதி ஆயோக் சிஇஓ-வின் புதிய வெளிப்பாடு நிரூபித்துள்ளது. இது அரசமைப்பு நிறுவனமான நிதி ஆயோக்கின் பணி மற்றும் பரிந்துரை களில் ஒன்றிய அரசு தலையிடுவது மட்டுமல்லாமல், அன்றாட நிதி விவ காரங்களை பாதிக்கும் முடிவுகளை செயல்படுத்துகிறது என்பதையும், மாநிலத்திற்குத் தர வேண்டியதைத் தராமல் அவற்றை திணற வைப்ப தையுமே இது காட்டுகிறது.
இது போன்ற விஷயங்களை உச்ச நீதி மன்றத்திலும் கேரளம் எழுப்பி வரு கிறது. தில்லியில் நடத்த முடிவு செய் யப்பட்டுள்ள போராட்டமும் (பிப்.8) இந்தக் கோரிக்கைகளைத்தான் வலி யுறுத்துகிறது. இவ்வாறு கே.என். பாலகோபால் தெரிவித்துள்ளார்.