states

கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் முன்னேற்றம் எல்டிஎப் 23, யுடிஎப் 19, பாஜக 3,

கேரளத்தில் 49 உள்ளாட்சி வார்டு களுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள்  வயநாடு துயரத்திற்கிடையே வெளியிடப்பட்டன.

இதில எல்டிஎப் அமோக வெற்றி பெற்றுள் ளது. வயநாடு தவிர மாநிலத்தின் 13  மாவட்டங்களில் நடைபெற்ற இடைத்தேர் தலில் எல்டிஎப் வேட்பாளர்கள் 23 இடங்களில் வெற்றி பெற்றனர். யுடிஎப் 19 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். யுடிஎப் வசமிருந்த 8 இடங்களையும் பாஜகவிடம் இருந்த நான்கு இடங்களையும் எல்டிஎப் கைப்பற்றியது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து இடங்களையும் எல்டிஎப் கைப் பற்றியது. ஒரு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் இரண்டு நகராட்சி கவுன்சில்கள் உட்பட 8 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த இடங்களையும் எல்டிஎப் கைப்பற்றியது. இவை காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்த தலா 4 இடங்களாகும்.

திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்தில் வெள்ளநாடு கோட்டத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எல்.டி.எப் வேட்பாளர் வெள்ளநாடு சசி சுமார் ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். யுடிஎப் வேட் பாளராக போட்டியிட்ட ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வி.ஆர்.பிரதாபனை சசி தோற்க டித்தார். காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த வெள்ளநாடு சசி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒத்துழைக்க முடிவு செய்து பதவியை ராஜினாமா செய்த வெள்ளநாடு வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

அற்றிங்கல் நகராட்சிக்கு உட்பட்ட செரு வள்ளிமுக்கு, தொட்டவாரம் வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பாஜகவிடமி ருந்த வார்டுகளை எல்.டி.எப் கைப்பற்றியது. செருவள்ளிமுக்கில் எல்டிஎப் வேட்பாளர் எம்.எஸ்.மஞ்சுவும், தோட்டவாரத்தில் ஜி.லே காவும் வெற்றி பெற்றனர். இரண்டு இடங்களி லும் பாஜக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.  இரு தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர் தல் நடைபெற்றது. கடந்த முறை செருவள்ளி முக்கு வார்டில் பாஜக 4 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

திருவனந்தபுரம் பெரிங்ஙம்மலா பஞ்சா யத்தில் கரிமன்கோடு, மடத்தரா, கொல்லாய் ஆகிய வார்டுகளிலும் எல்டிஎப் வெற்றி  பெற்றது. 3 சிட்டிங் இடங்களையும் காங்கி ரஸிடம் இருந்து கைப்பற்றியதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் எல்டிஎப் வசம் சென்றது.கரிமன்கோடு வார்டில் எம்.ஷஹனாஸ் 314 ஓட்டுகள் வித்தியாசத்திலும், கொல்லாய் வார்டில் கலயபுரம் அன்சாரி 438 ஓட்டுகள் வித்தியாசத்திலும், மடத்தரா வார்டில் ஷினு 203 ஓட்டுகள் வித்தியா சத்திலும் வெற்றி பெற்றனர். தற்போதைய கட்சி நிலைகள் எல்டிஎப் 10, யுடிஎப் 8 பாஜக 1 ஆகும். பெரிங்ஙம்மலா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூவரும் காங்கிரஸில் இருந்து விலகி, சிபிஎம்முடன் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

திருவனந்தபுரத்தில் பாஜக ஆளும் கரவாரம் பஞ்சாயத்தில், இடைத்தேர்தல் நடந்த 2 வார்டுகளிலும் எல்.டி.எப் வெற்றி பெற்றது. தற்போது பாஜகவும் எல்டிஎப்பும் தலா 7 உறுப்பினர்களுடன் சமநிலையில் உள்ளன. பட்ள வார்டில் பஞ்சாயத்து முன் னாள் தலைவரான கே.பேபி கிரிஜாவும், சாத்தம்பாறை வார்டில் வி.ஜி.வேணுவும் வெற்றி பெற்றனர். பாஜகவின் தவறான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணைத் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் ராஜினாமா செய்ததையடுத்து, இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இருவரும் சிபிஎம் உடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். பஞ்சாயத்தில் தற்போதைய கட்சி நிலை பாஜக-7, எல்டிஎப்-7, யுடிஎப்-2,  எஸ்டி பிஐ-2 ஆகும்.

கொல்லம் மாவட்டத்தில் 3 யுடிஎப், 1 எல்டிஎப். பத்தமனம்திட்டா யுடிஎப் 2, ஆலப்புழாவில் எல்டிஎப் 2, பாஜக 1, கோட்டயம் மாவட்டத்தில் எல்டிஎப் 2, யுடிஎப் 1, இடுக்கி யுடிஎப் 2, எல்டிஎப் 1, பாஜக 1, எர்ணாகுளம் யுடிஎப் 2, எல்டிஎப் 1, திருச்சூர் எல்டிஎப் 2, பாஜக 1, பாலக்காடு யுடிஎப் 3, எல்டிஎப் 2, மலப்புறம் யுடிஎப் 3, வெல்பேர் கட்சி 1, கோழிக்கோடு யுடிஎப் 3, எல்டிஎப் 1, கண்ணூர் எல்டிஎப் 3, காசர்கோடு மாவட்டத் தில் யுடிஎப் 2, சுயேச்சை 1 வெற்றி பெற்றுள்ளனர்.