states

img

சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள் - பக்தர்களுக்கு வேண்டுகோள்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 17 ஆம் தேதி (இன்று) 18 ஆம் தேதி (நாளை) வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்று உருவாகியதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில  தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர்  மாவட்டங்களுக்கு  ரெட் எச்சரிக்கை எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா,பாலக்காடு,மலப்புரம், கோழிக்கோடு,  வயநாடு  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா  மாவட்டத்தில்  கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்துவருவதால், பம்பாநதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பம்பா நதியில் அபாயக் கட்டத்தை தாண்டி நீர்  செல்வதால்  சபரிமலைக்குப் பக்தர்கள் இன்றும், நாளையும் வருவதைத் தவிர்க்குமாறு  திருவிதாங்கூர்  தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் 21-ம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்குத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  ஆனால், பக்தர்கள் ஆன்-லைன் முன்பதிவு மூலமே, முறையான கொரோனா பாதுகாப்பு  வழிகாட்டல்களுடன் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

;