states

img

அரசு பேருந்து ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது அவசியம் - கேரள அரசின் அதிரடி உத்தரவு!

கேரள மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் அரசு பேருந்து மற்றும் கனரக பேருந்து ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோணி ராஜூ கூறும்போது: கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் பல செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து விதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

அது முக்கியமானதாக அரசு பேருந்து மற்றும் கனரக பேருந்து ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.2000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்

;