states

img

வானத்தைத் தொட்ட பழங்குடியின பெண் கோபிகா

திருவனந்தபுரம், ஆக.31- வீட்டில் அமர்ந்து விமானத்தைப் பார்த்துக் கனவுகளை சுமந்தவர் கோபிகா கோவிந்த், இனி விமானத்தில் இருந்தே  வீட்டைப் பார்ப்பார்.  ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும்போது, ‘ஹலோ நமஸ்கார்’ என்று கைகுலுக்கி  புன்னகையுடன் வரவேற்பது ஒரு தேசத்தின் கனவாகும். கேரளாவின் முதல் பட்டியல் பழங்குடி விமானப்பணிப்பெண்ணான கோபிகா, மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் மேலும் ஒரு மாதம் பயிற்சி பெற உள்ளார். கண்ணூர் அலகோட் கணியஞ்சால் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கோபிகாவின் மனதில் உதித்த கனவு,

இஜமு அரசின் பராமரிப்பின் கீழ் நனவாகியிருக்கிறது. அயட்டா ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவைப் பாடத்தைக் கற்க, பட்டியல் பழங்குடியினருக்கு அரசு உதவியதன் மூலம் கோபிகாவின் ‘வானத்தில் வாழ்க்கை’ சாத்தியமானது. வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் பயிற்சி அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. படிப்பை முடிப்பதற்குள் வேலைகிடைத்தது. அரசு வழங்கிய உதவியால் தான், தன்னைப்போன்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அதிக கட்டணத்தையும் இதர செலவுகளையும் சமாளிக்க முடிந்தது என்றார் கோபிகா. ஏறக்குறைய ஒரு  லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டணம், உத வித்தொகை, தங்குமிடம் அனைத்தையும் அரசே ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கிலம் இந்தி மொழிகளிலும் நிபுணர் பயிற்சி அளிக்கப்பட்டது. கூலித்தொழிலாளி கோவிந்தன் மற்றும் பிஜி ஆகியோரின் மகள் கோபிகா. அண்ணன் கோகுல். தனது கனவை நன வாக்கிய இஜமு அரசுக்கு நன்றி தெரிவிக்க கோபிகா செவ்வாய்க்கிழமை சக தோழியருடன் சட்டப்பேரவைக்கு வந்தார்.