திருவனந்தபுரம், ஜுன் 22- எண்டோசல்பான் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு கிராமம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் எம்.வி.கோ விந்தன் தெரிவித்தார். காசர்கோட்டில் நடந்த எண்டோசல்பான் செல் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் இதை தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் பன்முக கலை மையத்தின் மாதிரியில் உலகத் தரம் வாய்ந்த மறுவாழ்வு கிராமம் மூளியாறில் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுக்காடுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார். மூளியாற்றில் ஒதுக்கப் பட்ட 25 ஏக்கர் நிலத்தில் மறுவாழ்வுக் கிரா மத்தை உருவாக்குவதே இதன் நோக்கமா கும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணி விரைவில் நிறைவடையும். ஜூலை இறுதிக் குள், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோ ருக்கு வழங்கப்பட்டு விடும். எண்டோசல்பான் பேரிடர் பட்டியலில் உள்ள
ஒரு நோயாளி அதே நிலையில் உள்ள மற்றொரு நபர் வீட்டில் இருந்தால், அந்த நோயாளியும் இலவச சிகிச்சை பெறுவார். இதற்கு தேவையான பரிசோதனைகள் நடத்த தனி மருத்துக்குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். என்மகஜே, புல்லூர் கிராமங்களில் சாபல்யம் திட்டத்தின் கீழ் சாய் அறக்கட்டளையால் கட்டப்பட்டு மீத முள்ள 10 வீடுகள் ஜூன் 24 ஆம் தேதி பாதிக் கப்பட்டோருக்கு வழங்கப்படும். வீடு தேவைப்படுபவர்களின் காத்திருப்புப் பட்டியலும் தயாரிக்கப்படும். வீடுகளுக்கு மின்சாரம், சாலை வசதிகளை விரைவில் ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எண்டோசல்பான் பாதிக்கப் பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய 6 நபர்களின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தனிப்பட்ட புகார்களை பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அமைச் சர் உத்தரவிட்டார். பட்ஸ் பள்ளிகளை சிறப் பாக செயல்படுத்த, எண்டோசல்பான் பாதிக்கப் பட்டவர்களுக்காக கட்டப்பட்ட பட்ஸ் பள்ளி களை அரசு கையகப்படுத்த கோரிக்கை வைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.