states

img

வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கொடுப்போரை தொழில் பங்குதாரராக சேர்க்க புதிய திட்டம்

திருவனந்தபுரம், பிப்.5- பெரிய தொழில் நிறுவ னங்களுக்கு நிலம்  கொடுக்கும் உரிமையா ளர்களை தொழில் முதலீட் டாளர்களாக மாற்ற கேரள அரசு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தொ ழில் பூங்காக்கள் மற்றும் டவுன்ஷிப்களுக்கு நிலம்  அளிப்பவர்களை அந்த  தொழிலில் பங்குதார ராக்கும் ‘லேண்ட் பூலிங்’  முறை செயல்படுத்தப்படு கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட 60,000 கோடி ரூபாய்  மதிப்பிலான விழிஞ்ஞம்-நாவாய்குளம் தொழில் வழித் தட திட்டத்தில் முதலில் நிலம் கையகப்படுத்தப்படும். இதற் காக சிறப்பு முதலீட்டு மண்ட லங்கள் சட்டம் மற்றும் லேண்ட் பூலிங் மறுமேம் பாடு விதிகள் என இரண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
தொழில்துறை வழித்தடம்
விழிஞ்ஞம் - நாவாய் குளம் வரையிலான 77 கி.மீ  நீளமுள்ள சுற்றுச் சாலையின்  இருபுறமும் விழிஞ்ஞம்-நாவாய்குளம்-தொழில் வழித் தடம் அமைக்கப்படும். இது தொழில்துறை பூங்காக் கள், அறிவு மையங்கள், கொள்கலன் சேமிப்புகள், வணிக வளாகங்கள், தள வாட மையங்கள், டவுன்ஷிப் கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களின் பரந்த வலை யமைப்பாகும்.