திருவனந்தபுரம், டிச.2- சிஐடியு மாநிலத் தலைவராக டி.பி.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஐடியு தலைவர் ஆனந்தலவட்டம் ஆனந்தன் மறைவையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி மெர்சி குட்டியம்மா தலைமையில் நடைபெற்ற சிஐடியு மாநிலக் குழு கூட்டத்தில் புதிய தலைவராக டி.பி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த டி.பி.ராமகிருஷ்ணன், தற்போது மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். முதல்வர் பினராயி விஜயன் அரசில் கலால் - தொழிலாளர் துறை அமைச்ச ராக இருந்தார். 1970 முதல், அவர் தொழிற்சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சிபிஎம் கோழிக்கோடு மாவட்டச் செய லாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.